காதலில் எதிரியே இதுதாங்க… ஏற்கனவே கமிட்டான நடிகை ரகுல் ப்ரீத் சிங் அளித்த விளக்கம்!

  • IndiaGlitz, [Tuesday,June 20 2023]

தமிழ், தெலுங்கு, இந்தி எனப் பல மொழி திரைப்படங்களில் நடித்து தற்போது இந்தியா முழுக்கவே பிரபலமாகி வரும் நடிகை ரகுல் ப்ரீத் சிங் காதல் குறித்து பேசியிருக்கும் கருத்துகள் தற்போது இணையத்தில் படு வைரலாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.

தமிழில் நடிகர் சூர்யா, கார்த்தியுடன் இணைந்து ஒருசில திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங். ஏற்கனவே தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்துவந்த இவர் தற்போது பாலிவுட்டில் அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் தயாரிப்பாளர் ஜாக்கி பக்னானியை காதலிப்பதாக நடிகை ரகுல் ப்ரீத் சிங் தகவல் வெளியிட்டு இருந்தார். 2021 இல் தங்களது உறவை சமூக வலைத்தளத்தில் வெளிப்படுத்திக் கொண்ட இந்த ஜோடிகள் அவ்வபோது ஊர் சுற்றும் புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி வருகிறது.

இந்நிலையில் நடிகை ரகுல் ப்ரீத் சிங், பாலிவுட்டில் பூமி பெட்னேகர் மற்றும் அர்ஜுன் கபூருடன் இணைந்து புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் தமிழில் நடிகர் கமல்ஹாசன் நடித்துவரும் ‘இந்தியன் 2’ திரைப்படத்திலும் இணைந்திருக்கிறார். இதைத்தவிர இந்தியில் இயக்குநர் நிகில் மகாஜன் இயக்கியுள்ள ‘ஐ லவ் யூ’ எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். ஜுன் 16 ஆம் தேதி ஜியோ சினிமாவில் வெளியான இந்தத் திரைப்படம் தற்போது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் தனது ஐ லவ் யூ திரைப்படம் குறித்த நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகை ரகுல் ப்ரீத் சிங் காதலை பலரும் தவறாக பயன்படுத்தி வருகின்றனர் என்றும் உண்மையான காதல் உங்களை வளர்ச்சியடைய வைப்பதாக இருக்க வேண்டும் என்று விளக்கம் அளித்திருக்கிறார்.

அதில் ‘காதலில் மிகப் பெரிய எதிரியே பொய்தான். ஒரு நெருக்கமான உறவில் இருக்கும்போது பொய் சொல்வதற்கும் மறைப்பதற்கும் இடமில்லை. அவர்களுக்குள் பேசிக்கொள்ள முடியாத விஷயங்கள் என்று எதுவுமில்லை.

காதலர்களாக மாறுவதற்கு முன்பு நண்பர்களாக இருந்திருப்போம். அந்த உறவில் எதை வேண்டுமானாலும் பேசலாம். மறைப்பதற்கும் பொய் சொல்வதற்கும் தயக்கமே இருந்திருக்காது. தவறு செய்தாலும் அதை மறைக்காமல் மனம் விட்டு பேச முடியும்.

நாம் மனிதர்கள் தானே. தவறு செய்வது இயல்புதான். செய்த தவற்றை சொல்லாமல் இருப்பதுதான் காதலில் இருக்கும் பெரிய பிரச்சனை. காதலில் பொய் சொல்வதையும் எமோஷனலாக பேசி ஏமாற்றுவதையும் என்னால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இன்று பலரும் காதலை தவறாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். எதை எதையோ காதல் என்று நினைத்துக் கொள்கிறார்கள்.

மேலும் தாங்கள் காதல் செய்யும் நபர்களை வளர விடாமல் தனக்கு என்ன பிடிக்குமோ அதையேதான் செய்ய வேண்டுமென கட்டாயப்படுத்துகிறார்கள். உங்களை மகிழ்ச்சியாக மேலும் மேலும் வளர்ச்சியடைய வைப்பதுதான் உண்மையான காதலாக இருக்க முடியும் என்று நான் நினைக்கிறேன் என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் ‘ஐ லவ் யூ’ திரைப்படம் குறித்து நடிகை ரகுல் ப்ரீத் சிங் காதல் குறித்து அளித்திருக்கும் இந்த விளக்கம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.

More News

திமுக-காங். கூட்டணியில் விஜய்யை இணைத்துக்கொள்ள தயார்: நடிகர் - காங்கிரஸ் எம்பி பேட்டி..!

நடிகர் விஜய் இன்னும் அரசியலுக்கு வருவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை, அரசியல் கட்சியும் அதிகாரபூர்வமாக தொடங்கவில்லை, ஆனால் விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்தால் திமுக -

தான் படித்த கல்லூரிக்கு ரூ.315 கோடி நன்கொடை வழங்கிய இன்ஃபோசிஸ் நந்தன் நீலேகணி!

இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனராக இருந்துவரும் நந்தன் நீலேகணி இந்தியாவின் முக்கிய ஐஐடி நிறுவனங்களுள் ஒன்றான பாம்பே ஐஐடி நிறுவனத்திற்கு ரூ.315 கோடி நன்கொடை வழங்கியிருப்பதாகத் தகவல்

வாடாத ஒரு செடியில் இத்தனை நன்மைகளா? பிரண்டையின் மருத்துவ குணங்கள்!

கீரைகளைச் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி ஏராளமாக கேட்டிருப்போம். ஆனால் பிரண்டை என்ற வாடாத கீரையைக் குறித்து நகரப் பகுதிகளில் இருப்பவர்களுக்கு அவ்வளவாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

இந்தியாவில் 'லியோ' படம் தான் முதல் முறை.. ஒளிப்பதிவாளர் பகிர்ந்த வீடியோ வைரல்..!

தளபதி விஜய் நடித்து வரும் 'லியோ' படம் குறித்த ஆச்சரியமான செய்திகள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் இந்தியாவில் முதல்முறையாக KOMODO X என்ற கேமராவை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட திரைப்படம்

500க்கு 498 மதிப்பெண் எடுத்த மாணவியை கண்டுகொள்ளாத மீடியா.. கெளரவப்படுத்திய விஜய்..!

10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 500க்கு 498 மதிப்பெண்கள் எடுத்த மாணவியை எந்த மீடியாவும் கண்டு கொள்ளாத நிலையில் முதல் முறையாக நடிகர் விஜய் சமீபத்தில் நடந்த கல்வி விழாவில் அந்த மாணவியை கௌரவப்படுத்திய