ஜாக்குலினை அடுத்து சினிமாவில் அறிமுகமாகும் ரக்சன்

  • IndiaGlitz, [Saturday,February 24 2018]

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் கலக்க போவது யாரு நிகழ்ச்சியின் தொகுப்பாளர்களான ஜாக்குலின், ரக்சன் ஏற்கனவே பிரபலம் அடைந்த நிலையில், ஜாக்குலின், நயன்தாராவின் 'கோலமாவு கோகிலா' படத்தில் அவருக்கு சகோதரியாக நடித்துவருகிறார்.

இந்த நிலையில் இதே நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ரக்சனும் தற்போது புதிய திரைப்படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். துல்கர் சல்மான் நடிப்பில் அறிமுக இயக்குனர் தேசிங் பெரியசாமி இயக்கத்தில் உருவாகவுள்ள 'கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால்' படத்தில் ரக்சன் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். இந்த தகவலை துல்கர் சல்மான் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்யப்பட்ட  வீடியோ ஒன்றில் உறுதி செய்துள்ளார்.

சந்தானம், சிவகார்த்திகேயன், மா.கா.பா போன்றவர்களை தொடர்ந்து ரக்சன், ஜாக்குலினும் சினிமாவில் புகழ் பெற வாழ்த்துவோம்

 

More News

ரஜினி படம் குறித்து கார்த்திக் சுப்புராஜ் கூறிய லேட்டஸ்ட் தகவல்

ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக புதிய படத்தை தயாரிக்கவுள்ளது என்று நேற்று வெளியான செய்தி ரஜினி ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி

மோடி மோசடியால் விராத் கோஹ்லி பதவிக்கு ஆபத்தா?

பிரபல வைர வியாபாரி நீரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.11500 கோடி கடன் பெற்று வெளிநாட்டுக்கு தப்பியோடிய நிலையில் அந்த வங்கியின் நிலை ஆட்டம் கண்டுள்ளது

ஜிவி பிரகாஷின் அடுத்த படத்தை இயக்கும் தேசிய விருது பட இயக்குனர்

கடந்த 2006ஆம் ஆண்டு வெளிவந்த தேசிய விருது பெற்ற திரைப்படமான 'வெயில்' படத்தை இயக்கிய இயக்குனர் வசந்தபாலன், ஜிவி பிரகாஷின் அடுத்த படத்தை இயக்க ஒப்பந்தமாகியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

கியூப் நிறுவனத்துடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி: அதிரடி முடிவெடித்த தயாரிப்பாளர் சங்கம்

தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் கியூப் நிறுவனத்துடனான பேச்சுவார்த்தை இன்று பெங்களூரில் நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் டிடிஎஸ் கட்டணத்தை குறைக்க வேண்டும்

ரஜினியின் '2.0' படம் எப்பதான் ரிலீஸ் ஆகும்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், ஷங்கர் இயக்கிய பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகி வரும் '2.0' திரைப்படம் கடந்த ஆண்டு தீபாவளி திருநாளில் வெளியாகும் என்று முதலில் கூறப்பட்டது.