மனைவி வருகையை பார்த்தவுடன் ராஜூவின் ரியாக்சன்: செம சாங் செலக்சன் பிக்பாஸ்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த இரண்டு நாட்களாக போட்டியாளர்களின் குடும்பத்தினர் வருகை தந்து கொண்டிருக்கின்றனர் என்பதும், மிகவும் நெகிழ்ச்சியான இந்த டாஸ்க் போட்டியாளர்களுக்கு மட்டுமின்றி பார்வையாளர்களுக்கும் ஆனந்த கண்ணீரை வரவழைக்கும் வகையில் இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்றைய முதல் புரமோவில் நிரூப் அப்பா வந்ததை அடுத்து சற்றுமுன் வெளியான இரண்டாவது புரமோவில் ராஜூவின் மனைவி மற்றும் தாயார் வருகை தருகின்றனர். ராஜுவின் மனைவி உள்ளே நுழைந்தவுடன் ராஜு நேராக சென்று அவரை கட்டிப்பிடித்து தனது உணர்ச்சியை வெளிப்படுத்தினார். இதன் பின்னணியில், ‘நீ கவிதைகளாய், கனவுகளாய், கயல்விழியே’ என்ற பாடலை பிக்பாஸ் ஒளிபரப்பினார். ‘மரகத நாணயம்’ என்ற படத்தில் இடம்பெற்ற இந்த பாடல் ராஜூ அவரது மனைவியை சந்திக்கும் காட்சிக்கு பொருத்தமாக இருந்தது.

அதேபோல் ராஜுவின் அம்மா அவர்கள் வந்தபோது அவரையும் கட்டிப்பிடித்து ராஜூ உணர்ச்சிவசப்பட்ட போது ’உன்னை பார்த்தால் போதும், எந்தன் அழகு குட்டி செல்லம், இந்த ஜென்மம் தீரும்’ என்ற பாடலை பிக்பாஸ் ஒளிபரப்பினார். தாய்மை உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் இந்த பாடலும் செம செலக்சன் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மொத்தத்தில் ராஜூவின் குடும்பத்தினரின் வருகை பிக்பாஸ் வீட்டையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

வெங்கட்பிரபுவின் அடுத்த படம் குறித்த அதிரடி அறிவிப்பு!

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவான 'மாநாடு' திரைப்படம் சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் தெரிந்ததே, மேலும் நேற்று இந்த படத்தின் வெற்றி விழாவில்

இதுவே பெரிய சாதனை தான்: ஆஸ்கார் விருது குறித்து விக்னேஷ் சிவன்!

விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா தயாரிப்பில் உருவாகிய 'கூழாங்கல்' என்ற திரைப்படம் ஆஸ்கார் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட நிலையில் தற்போது 'இதுவே பெரிய சாதனை' என வருத்தத்துடன் பதிவு செய்திருப்பது

'விருமன்' படம் குறித்து மாஸ் அப்டேட் தந்த அதிதிஷங்கர்!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதிஷங்கர் தனது சமூக வலைத்தளத்தில் 'விருமன்' படம் குறித்த மாஸ் அப்டேட்டை பதிவு செய்துள்ள நிலையில் அந்த அப்டேட் தற்போது வைரலாகி வருகிறது.

உன்னால் எனக்கு பிபி ஏறிடுச்சுடா: புலம்பிய போட்டியாளரின் தந்தை

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் போட்டியாளர்களின் குடும்பத்தினர் வரும் டாஸ்க் நடைபெற்று வருகிறது என்பதும் நேற்று அக்ஷராவின் தாய் மற்றும் சகோதரர் வந்தனர் என்பதும் அதேபோல் சிபியின் தந்தை மற்றும்

ஓய்வு பெற்றிருப்பேன்… எனது கம்பேக்கிற்கு இவர்தான் காரணம்… மனம்திறந்த அஸ்வின்!

இந்தியக் கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டராகவும் மிகச்சிறந்த சுழற்பந்து வீச்சாளராகவும் வலம்வரும் ரவிச்சந்திரன்