close
Choose your channels

ராஜூ முருகனின் அடுத்த படம்.. நடிப்பு அரக்கன் தான் ஹீரோவா?

Friday, February 9, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ராஜு முருகனின் இயக்கத்தில் உருவாகும் அடுத்த திரைப்படத்தில் நடிப்பு அரக்கன் எஸ்ஜே சூர்யா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி நடித்த ’ஜப்பான்’ திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான நிலையில் அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்பது அவருக்கு ஏமாற்றமாகவே இருந்தது. இருப்பினும் ராஜூ முருகன் தற்போது அடுத்த படத்தை இயக்குவதற்கான பணிகளை தொடங்கி விட்டதாகவும் எஸ்ஜே சூர்யாவிடம் கூறிய கதை பிடித்து விட்டதை அடுத்து அவர் ஹீரோவாக நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த படத்தை ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்நிறுவனம் ஏற்கனவே கவின் நடித்த ’டாடா’ என்ற வெற்றிப் படத்தை தயாரித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எஸ்ஜே சூர்யா தற்போது மூன்று தமிழ் படங்கள் மற்றும் இரண்டு தெலுங்கு படங்கள் என பிசியாக இருப்பதால் இந்த படங்களை முடித்துவிட்டு அவர் ராஜு முருகன் படத்தில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளாகவே எஸ்.ஜே சூர்யா வில்லனாக நடித்த படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து அவருக்கு ரசிகர்கள் நடிப்பு அரக்கன் என்ற பட்டத்தை கொடுத்துள்ளனர். இந்த நிலையில் தற்போது மீண்டும் அவர் ஹீரோவாக நடிக்க இருக்கும் திரைப்படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு ஏற்படும் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment