ஏதோ உள்நோக்கம் உள்ளது. கந்தசஷ்டி கவசம் விவகாரம் குறித்து நடிகர் ராஜ்கிரண் 

  • IndiaGlitz, [Wednesday,July 15 2020]

கந்தசஷ்டி கவசம் குறித்து அருவருப்பாக விமர்சனம் செய்து வீடியோ வெளியிட்ட நபருக்கு கண்டனங்கள் குவிந்து வரும் நிலையில் பல திரையுலக பிரபலங்கள் இதுகுறித்து தங்கள் சமூக வலைத்தளங்களில் தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் ராஜ்கிரண் இதுகுறித்து தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது:

கந்தர் சஷ்டி கவசம்.
ஒவ்வொரு மனிதனுக்கும்,
எந்த வகையிலேனும்,
தனக்கு பாதுகாப்பு தேடிக்கொள்ள
உரிமை இருக்கிறது.
அது, அவனது சுதந்திரம்.
முருகப்பெருமானை நம்புவோர்க்கு,
கந்தர் சஷ்டி கவசம் என்பது,
ஒரு பாதுகாப்பு அரண்.
இதை ஆழ்ந்து படித்தால்,
அறிவியல்பூர்வமான,
மனோதத்துவரீதியான
ஆத்ம பலன்கள் இருக்கின்றன...
இறைவனை நம்பாதோர்க்கு,
நம்பாமை என்பது,
அவர்களின் சுதந்திரம்.
நம்பிக்கை கொண்டோர்க்கு,
நம்புதல் என்பது,
அவர்களின் சுதந்திரம்.
இதில், அவரவர் எல்லையோடு
அவரவர்கள் நின்று கொள்வது தான்,
மேன்மையானது.
தேவையில்லாமல் மற்றவர் எல்லைக்குள்
புகுந்து, விமர்சனம் செய்வதென்பது,
மிகவும் கீழ்மையானது...
இந்த கொடிய கொரோனா காலகட்டத்தில்,
நோயோடும், நோய் பயத்தோடும்,
பொருளாதார சீர்கேட்டோடும்,
உண்ண உணவின்றி
கோடிக்கணக்கான நம் மக்கள்
தவித்துக்கொண்டிருக்கும் சூழலில்,
இப்படி ஒரு பிரச்சினைக்கு தீ மூட்டுவதில்,
யாருக்கோ, ஏதோ, உள் நோக்கம்
இருப்பதாகவே நினைக்கத்தோன்றுகிறது..

More News

நித்யாமேனனின் லிப்லாக் காட்சி, அதிலும் பெண்ணுடன்: அதிர்ச்சியில் ரசிகர்கள்

கடந்த 2011 ஆம் ஆண்டு வெளிவந்த 'வெப்பம்' என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் காஞ்சனா-2, 24, இருமுகன், மெர்சல், சைக்கோ உள்ளிட்ட பலர் தமிழ் திரைப்படங்களிலும்

மறைந்த சிரஞ்சீவி சார்ஜாவின் சகோதரருக்கு கொரோனா: மனைவிக்கும் பாசிட்டிவ் என தகவல்

பிரபல கன்னட நடிகரும், நடிகை மேக்னா ராஜின் கணவருமான சிரஞ்சீவி சார்ஜா சமீபத்தில் திடீரென மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார் என்பதும் அவரது மறைவு கன்னட திரையுலகை மட்டுமின்றி

சீரியலிலும் கர்ப்பம், நிஜத்திலும் கர்ப்பம்: பிரபல நடிகைக்கு குவியும் வாழ்த்துக்கள்

சீரியலில் கர்ப்பமாக நடித்து வரும் நடிகை தற்போது நிஜத்திலும் கர்ப்பமாகி உள்ளதால் அவருக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர் 

யார் யாருக்கோ சண்டை… எதுக்கு உருட்டுறீங்க என் மண்டைய… வெதும்வும் ஹாங்காங்!!!

அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே இருந்து வந்த அழுத்தம் தற்போது அரசியல் காரணங்களைத் தாண்டி பொருளாதாரத் தடையாகவும் மாறியிருக்கிறது

இந்தியாவின் கொரோனா தடுப்பூசி: தற்போதைய நிலைமை என்ன???

இந்தியாவின் கொரோனா தடுப்பூசி வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதி பொது மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என இந்திய மருத்து ஆராய்ச்சி கழகத்தின்