அடுத்த லெவலுக்கு சென்றது 'தக்லைஃப்' திரைப்படம்.. ராஜ்கமல் பிலிம்ஸ் வெளியிட்ட வீடியோ..!

  • IndiaGlitz, [Monday,July 29 2024]

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தக்லைஃப்’ படத்தின் படப்பிடிப்பு ஒரு பக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்னொரு பக்கம் இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் அடுத்த லெவல் பணியான டப்பிங் பணிகளை கமல்ஹாசன் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த வீடியோவையும் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளது.

முதல் கட்டமாக கமல்ஹாசன் இதுவரை தான் நடித்த காட்சிகளுக்கு டப்பிங் குரல் கொடுக்கும் காட்சிகள் அந்த வீடியோவில் உள்ளன. இதை அடுத்து சிம்பு உட்பட மற்ற நடிகர்களும் விரைவில் டப்பிங் குரல் கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ‘தக்லைஃப்’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு அயர்லாந்து நாட்டில் நடத்த திட்டமிடப்பட்டு இருந்ததாகவும் ஆனால் சில பிரச்சினைகள் காரணமாக தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பை கோவாவில் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் விரைவில் கமல்ஹாசன், மணிரத்னம் உள்பட படக்குழுவினர் கோவா செல்ல இருப்பதாகவும் கூறப்படுகிறது.

கோவாவில் கமல்ஹாசன், சிம்பு உள்பட பலரது காட்சிகள் படமாக்கப்பட இருப்பதாகவும் வரும் செப்டம்பர் மாதத்திற்குள் இந்த படத்தின் படப்பிடிப்பை முடிக்க மணிரத்னம் திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

கமல்ஹாசன், சிலம்பரசன், த்ரிஷா, அபிராமி, நாசர், அலி ஃபைசல், பங்கஜ் திரிபாதி, அசோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, வையாபுரி உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். ரவி கே சந்திரன் ஒளிப்பதிவில் ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனம், மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன.

 

More News

யுவன்ஷங்கர் ராஜா பெயரை மிஸ்யூஸ் செய்தாரா நடிகர் ரியோ ராஜ்? வைரல் வீடியோ..!

யுவன் சார்  தான் சொன்னார் என்று நடிகர் ரியோ ராஜ் அவரது பெயரை மிஸ்யூஸ் செய்ததாக வெளியாகி உள்ள வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தனுஷின் 'ராயன்' 3 நாட்களில் இத்தனை கோடி வசூலா? நன்றி தெரிவித்த தனுஷ்..!

தனுஷ் நடித்த 'ராயன்' திரைப்படம் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில் மிகப்பெரிய வசூல் கொடுத்துள்ள நிலையில் தனுஷ் ஆனது சமூக வலைதளம் மூலம் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

'சர்தார் 2' படத்தில் இந்த 3 நாயகிகளா?  ஏற்கனவே இணைந்த நடிப்பு அரக்கன்.. வேற லெவல் தகவல்..!

கார்த்தி நடிப்பில், பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் உருவாகி வரும் 'சர்தார் 2' படத்தில் 3 பிரபல நடிகைகள் இணைய இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

'வணங்கான்' படத்தின் முதல் விமர்சனம் கொடுத்த பிரபலம்.. என்ன சொல்லியிருக்கார்?

பாலா இயக்கத்தில் உருவான 'வணங்கான்' திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த படத்தை பார்த்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இந்த படம் குறித்த தனது கருத்தை

'கோட்' தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தியின் 'மன்னிப்பு' பதிவு.. என்ன காரணம்?

தளபதி விஜய் நடித்துக் கொண்டிருக்கும் 'கோட்' படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி திடீரென தனது சமூக வலைத்தளத்தில் 'சாரி' என பதிவு செய்துள்ளது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.