ஒரே நேரத்தில் 4 படங்களை தயாரிக்கும் ராஜ்கமல் பிலிம்ஸ்.. மேலும் 2 படங்களை தயாரிக்க திட்டம்..!

  • IndiaGlitz, [Tuesday,August 01 2023]

உலக நாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் ஒரே நேரத்தில் நான்கு திரைப்படங்களை தயாரித்து வருகிறது. இதுகுறித்த போஸ்டர் இந்நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படங்களில் ஒன்று சிவகார்த்திகேயன் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் படம். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது.

இதனை அடுத்து கமல்ஹாசனின் 233 வது படத்தை ஹெச் வினோத் இயக்கி இருக்கிறார். இந்த படத்தையும் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கவுள்ளது என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

இதனை அடுத்து மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க இருக்கும் 234 வது திரைப்படத்தையும் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க உள்ளது என்பதும் அதேபோல் சிம்பு நடிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் படத்தையும் இந்நிறுவனம் தயாரிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தனுஷ் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்தையும் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்தையும் இதே நிறுவனம் தயாரிக்க திட்டமிட்டுள்ளது.

கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் கடந்த 1981 ஆம் ஆண்டு ’ராஜபார்வை’ என்ற திரைப்படத்தை முதலில் தயாரித்தது. அதன் பிறகு ’விக்ரம்’ ’கடமை கண்ணியம் கட்டுப்பாடு’ ’சத்யா’ ’அபூர்வ சகோதரர்கள்’ ’தேவர் மகன்’ உள்ளிட்ட பல திரைப்படங்களை தயாரித்தது. கடந்த ஆண்டு இந்த நிறுவனம் தயாரித்த ’விக்ரம்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று ரூ.300 கோடிக்கு மேல் வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

தனுஷின் 'D50' படத்தில் 19 வயது அஜித் பட நடிகை.. விறுவிறுப்பான படப்பிடிப்பு..!

தனுஷ் நடித்து இயக்கி வரும் 50வது திரைப்படமான 'D50' திரைப்படத்தில் ஏற்கனவே ஒரு சில நட்சத்திரங்கள் இணைந்துள்ள நிலையில் தற்போது அஜித் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த 19 வயது  அனிதா சுரேந்திரன்

ஆகஸ்ட் 10ல் வெளியாகும் 'ஜெயிலர்': ரஜினிக்கு திரையரங்கு உரிமையாளர்கள் முக்கிய வேண்டுகோள்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில்  திரையரங்கு உரிமையாளர்கள் ரஜினிக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளனர்.

மாரி செல்வராஜ் எச்சரித்துள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும்: வன்னி அரசு ட்விட்..!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான 'மாமன்னன்' திரைப்படத்தில் இடம்பெற்ற வில்லன் கேரக்டரான பகத் பாசில் கேரக்டரை பின்னணியாக வைத்து ஜாதி பெருமைகளை பேசும் பாடல்களை இணைத்து

என்னங்கடா இப்படி அநியாயம் பண்றிங்க.. போதும் நிறுத்துங்க.. இயக்குனர் மோகன் ஜி ட்விட்..!

இயக்குனர் மோகன் ஜி தனது ட்விட்டர் பக்கத்தில் 'என்னங்கடா இப்படி அநியாயம் பண்றிங்க, போதும் நிறுத்துங்க' என்று பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

'வேள்பாரிக்கு' முன் ஷங்கரின் இன்னொரு படம்.. மீண்டும் இவர் தான் நாயகனா?

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் தற்போது கமல்ஹாசன் நடித்து வரும் 'இந்தியன் 2' மற்றும் ராம்சரண் தேஜா நடித்து வரும் 'கேம் சேஞ்சர்' ஆகிய திரைப்படங்களை இயக்கி வருகிறார் என்பதும் 'இந்தியன் 2' படத்தின்