லம்போர்கினி காரில் ரஜினியுடன் சென்றது யார் யார்? மீண்டும் டிரெண்ட்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கடந்த 40 ஆண்டுகளாக தலைப்புச் செய்திகளில் இடம் பெற்று வருகிறார் என்பதும் சமீபத்தில் கூட அவர் சாத்தான்குளம் சம்பவம் குறித்து கூறிய ’சத்தியமா விடவே கூடாது’ என்ற ஹேஷ்டேக் உலக அளவில் டிரெண்ட் ஆனது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் நேற்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது லம்போர்கினி காரை ஓட்டி சென்ற புகைப்படம் வைரலானது என்பதும் ‘லயன் இன் லம்போர்கினி’ என்ற ஹேஷ்டேக்’ இந்திய அளவில் டிரெண்ட் ஆனது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த புகைப்படத்தை யார் எடுத்தது? அவர் எங்கே சென்று கொண்டிருக்கிறார்? அந்த காரில் யார் யார் இருந்தனர்? என்பது குறித்த எந்த தகவலும் தெரியாத நிலையில் தற்போது மீண்டும் வெளியாகியுள்ள ஒரு புகைப்படம் இந்த கேள்விகளுக்கான விடையாக உள்ளது.

தற்போது வெளியாகியுள்ள புதிய புகைப்படத்தில் ரஜினியுடன் அவரது இளைய மகள் செளந்தர்யா, அவரது கணவர் விசாகன் மற்றும் ஐஸ்வர்யாவின் குழந்தை ஆகியோர் உள்ளனர். மேலும் இந்த புகைப்படம் ரஜினியின் பண்ணை வீட்டில் எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இயற்கை எழில் மிகுந்த பின்னணியில் உள்ள இந்த புகைப்படமும் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

கொரோனா ஒருவழியா முடிவுக்கு வந்துடும் போல… ஆக்ஸ்பேஃர்டு பல்கலைக் கழகத்தின் சிறப்பு அறிவிப்பு!!!

உலகளவில் கொரோனா தடுப்பூசி ஆய்வில் தற்போது ஆக்ஸ்பேஃர்டு பல்கலைக் கழகம் முன்னிலை பெற்று வருவதை செய்திகள் எடுத்துக் காட்டுகின்றன.

அருள்நிதியின் அடுத்த க்ரைம் துப்பறியும் படத்தின் டைட்டில் அறிவிப்பு!

வம்சம்','மௌனகுரு','தகராறு' 'டிமான்டி காலனி' 'ஆறாது சினம்' உள்பட ஒருசில திரைப்படங்களில் நடித்த அருள்நிதி நடிக்கவுள்ள அடுத்த படத்தின் டைட்டில் இன்று வெளியாகவிருப்பதாகவும்,

கருப்பர் கூட்டம் யூ ட்யூப் சேனலில் 500 வீடியோக்கள் நீக்கம்: சென்னை போலீசார் அதிரடி

கருப்பர் கூட்டம் என்ற 'யு டியூப்' சேனலில் சமீபத்தில் கந்தசஷ்டி கவசம் குறித்து சர்ச்சைக்குரிய ஒரு வீடியோ வெளியானதால் முருகபக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

கீழடியில் ரூ.12.21 கோடி மதிப்பிலான தொல்பொருள் அருங்காட்சியகம்!!! அடிக்கல் நாட்டிய தமிழக முதலமைச்சர்!!!

2600 ஆண்டு பழமையான தமிழர் பண்பாட்டை பறைசாற்றும் வண்ணம் பல்வேறு தொல்லியல் பொருட்கள் சிவகங்கை அருகேயுள்ள திருப்புவனத்தில் கண்டெடுக்கப் பட்டது.

வேலூர் சிறையில் தற்கொலைக்கு முயற்சித்தாரா நளினி: பரபரப்பு தகவல்

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிக்கி கடந்த 28 ஆண்டுகளாக சிறையில் இருந்து வரும் ஏழு பேர்களில் நளினி மற்றும் அவரது கணவர் முருகன் ஆகிய இருவர் என்பது தெரிந்ததே