சென்னை திரும்பிய ரஜினிகாந்த்.. பிரதமர் மோடிக்கும் 2 நண்பர்களுக்கும் வாழ்த்து..!

  • IndiaGlitz, [Wednesday,June 05 2024]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இமயமலைக்கு ஆன்மீக சுற்றுப்பயணம் சென்றார் என்பதும் அவர் கேதார்நாத், பத்ரிநாத் உள்ளிட்ட பகுதிகளில் இருந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் ரஜினிகாந்த் இமயமலை சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு டெல்லி செல்ல இருப்பதாகவும் பிரதமர் மோடி, சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோரை சந்தித்து விட்டு அதன் பின் மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளப் போவதாகவும் கூறப்பட்டது.

ஆனால் ரஜினிகாந்த் இமயமலையிலிருந்து நேராக இன்று சென்னை திரும்பிய நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் தேர்தல் வெற்றி குறித்த கேள்விக்கு பதில் அளித்த போது ’பிரதமர் மோடி அவர்களுக்கு தனது வாழ்த்து தெரிவித்தார்.

அது மட்டும் இன்றி தனது நண்பர்கள் ஆன தமிழக முதல்வர் முக ஸ்டாலின் மற்றும் ஆந்திர முதல்வராக பதவியேற்க இருக்கும் சந்திரபாபு நாயுடு ஆகிய இருவருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும் தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்க இருப்பதற்கு தனது வாழ்த்துக்கள் என்றும் அவர் தனது சமூக வலை தளத்தில் பதிவு செய்துள்ளார்.

மேலும் வரும் 8ஆம் தேதி மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்க இருப்பதாக கூறப்படும் நிலையில் அந்த விழாவில் ரஜினிகாந்த் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

More News

'அரண்மனை' 4ஆம் பாகத்தை அடுத்து இன்னொரு 4ஆம் பாக திரைப்படம்.. த்ரிலுக்கு தயாராகும் ரசிகர்கள்..!

தமிழ் திரை உலகில் அதிகபட்சமாக இரண்டு பாகங்கள் மட்டும் திரைப்படம் எடுத்துக் கொண்டிருக்கும் நிலையில் 'சிங்கம்' 'இந்தியன்' உள்பட ஒரு சில படங்கள் மட்டுமே மூன்றாம் பாகமும் தயாரிக்கப்பட்டு வருகிறது.

நடிகை சுனைனாவுக்கு திருமணமா? லாக் ஆன புகைப்படம் வைரல்..!

நடிகை சுனைனா லாக் ஆன புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு தனக்கு விரைவில் திருமணம் என்பதை மறைமுகமாக தெரிவித்துள்ளதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

ஆன்மீகமும், தீர்வுகளும்: டாக்டர். தீபா அருள்ஆலான் பேட்டி!

ஆன்மீகக்ளிட்ஸ் யூடியூப் சேனலில் வெளியாகியுள்ள புதிய வீடியோவில், டாக்டர். தீபா அருள்ஆலான் அவர்கள் பல்வேறு ஆன்மீக தகவல்களையும், பிரச்சனைகளுக்கு தீர்வுகளையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.

ஹாட்ஸ்டாரில் 'உப்பு புளி காரம்'.. பொன்வண்ணனுக்கு இன்னொரு மகனா? திடீர் ட்விஸ்ட்..!

ஹாட்ஸ்டாரில்  ஒளிபரப்பாகி உள்ள 'உப்பு புளி காரம்' என்ற வெப் தொடரின் முதல் இரண்டு எபிசோடுகள் எப்படி இருந்தது என்பதை சற்று முன் பார்த்தோம். இந்த நிலையில் அடுத்த இரண்டு எபிசோடுகளில் தனது

கண்ணன் ரவி குழுமத்தின்  'பராக்' உணவகம்: பிரமாண்டமான தொடக்கவிழா..!

ஐக்கிய அரபு அமீரகம் நாட்டில் தொழில் அதிபராக உள்ள தமிழர் கண்ணன் ரவி, துபாய் மற்றும் அபுதாபி நகரங்களில் பல்வேறு தொழில் செய்து வருகிறார் என்பதும் தெரிந்தது.