மாவட்ட செயலாளர்களுக்கு ரஜினி எச்சரிக்கை: பரபரப்பு தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் விரைவில் அரசியல் கட்சி தொடங்க இருக்கும் நிலையில் இன்று காலை ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட செயலாளர்களை அவர் சந்தித்தார் என்பது தெரிந்ததே.

இந்த சந்திப்பு கடந்த சில மணி நேரங்களாக நடைபெற்று வந்த நிலையில் இந்த சந்திப்பின்போது ரஜினி கூறிய சில விபரங்கள் தற்போது கசிந்துள்ளது. மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் யாரும் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடாது மாவட்ட செயலாளர்கள் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என்று ரஜினி எச்சரிக்கை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் நடந்தது என்ன? என்று வெளியில் சொன்னால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ரஜினி அறிவுறுத்தியதாக தெரிகிறது. எனவே இந்த எச்சரிக்கையின்படி இன்றைய ஆலோசனை கூட்டத்தில் நடந்தது என்ன என்பது குறித்த எந்த தகவலும் வெளியே வராது என்று கூறப்படுகிறது.