திடீரென மும்பை கிளம்பி சென்ற ரஜினிகாந்த்.. படப்பிடிப்பும் இல்லையாம்..!

  • IndiaGlitz, [Wednesday,November 15 2023]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மும்பை சென்ற நிலையில் அங்கு ’தலைவர் 170’ படத்தின் படப்பிடிப்பு நடந்தது என்பதை பார்த்தோம். குறிப்பாக அமிதாப் பச்சன் உடன் ரஜினிகாந்த் நடித்த காட்சிகளின் படப்பிடிப்பு நடந்தது.

இந்நிலையில் தலைவர் 170’ திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேற்று திடீரென ரஜினிகாந்த் மீண்டும் மும்பை கிளம்பி சென்றார். அவர் காரில் இருந்து இறங்கி விமான நிலையத்தை நோக்கி செல்லும்போது ரசிகர்கள் மற்றும் செய்தியாளர்கள் மும்பைக்கு படப்பிடிப்புக்காக செல்கிறீர்களா? என்று கேட்டபோது ’இல்லை, கிரிக்கெட் மேட்ச் பார்க்க போகிறேன்’ என்று கூறினார்.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையே இன்று உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி போட்டி மும்பையில் உள்ள வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெற உள்ள நிலையில் அந்த போட்டியை பார்க்கத்தான் ரஜினிகாந்த் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா, ரஜினிகாந்த் அவர்களுக்கு கோல்டன் பாஸ் வழங்கியிருந்தார் என்பது தெரிந்ததே.

More News

விஷ்ணுவை புரமோ பொறுக்கி என கூறிய போட்டியாளர்.. எட்டி உதைத்ததால் பரபரப்பு..!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான விஷ்ணுவை புரமோ பொறுக்கி என கேப்டன் தினேஷ் கூறியதை அடுத்து விஷ்ணு ஆத்திரமாகி அருகில் இருந்த பொருளை எட்டி உதைத்த

8000 துணை நடிகர்கள்.. ஹாலிவுட் தரம்.. ஷங்கரின் பிரமாண்ட படப்பிடிப்பு..!

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் தற்போது உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து வரும் 'இந்தியன் 2' மற்றும் ராம்சரண் தேஜா நடித்து வரும் 'கேம் சேஞ்சர்' ஆகிய இரண்டு திரைப்படங்களை இயக்கி வருகிறார்.

பொன்னியின் செல்வன், லியோ படங்களுக்கு பின் 'கங்குவா' தான்.. வேற லெவல் டெக்னாலஜி..!

தமிழ் திரை உலகை பொருத்தவரை 'பொன்னியின் செல்வன்' மற்றும் 'லியோ' படங்கள் ஐமாக்ஸ் தொழில்நுட்பத்தில் வெளியான நிலையில் அடுத்ததாக சூர்யா நடித்து வரும் 'கங்குவா' திரைப்படத்தையும் ஐமாக்ஸ்

110 நாட்கள் தொடர் படப்பிடிப்பு.. தனுஷின் 'D50' படத்தின் தற்போதைய நிலை என்ன?

 தனுஷ் நடித்து இயக்கி வரும்  'D50' என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது படப்பிடிப்பு நிறைவடையும் நிலையில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

ரஜினியுடன் ஒரு சந்திப்பு.. கார்த்திக் சுப்புராஜின் நெகிழ்ச்சியான பதிவு..!

 இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' என்ற திரைப்படம் தீபாவளி விருந்தாக வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தமிழ் திரை உலக பிரபலங்கள் பலர்