திடீரென வெளிநாட்டுக்கு கிளம்பிய ரஜினிகாந்த்.. எந்த நாடு? என்ன காரணம்?

  • IndiaGlitz, [Thursday,May 16 2024]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திடீரென வெளிநாட்டுக்கு கிளம்பி இருப்பதாகவும் அவர் எந்த நாட்டுக்கு சென்றார்? என்ன காரணத்துக்காக செல்கிறார்? என்ற விவரங்கள் தற்போது தெரியவந்துள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த சில மாதங்களாக ’ஜெய்பீம்’ இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வந்த ’வேட்டையன்’ படத்தின் படப்பிடிப்பில் இருந்த நிலையில் தற்போது அந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது என்ற செய்தி வெளியானது என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில் ’வேட்டையன்’ படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து ஓய்வு எடுக்க நடிகர் ரஜினிகாந்த் அபுதாபி சென்றுள்ளதாகவும் சென்னை விமான நிலையத்திலிருந்து அவர் அபுதாபி செல்லும் விமானத்தில் கிளம்பியதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. ஒரு வாரம் ரஜினிகாந்த் அபுதாபியில் தங்கி இருந்து ஓய்வு எடுக்க திட்டமிட்டிருப்பதாகவும் அதன் பிறகு அவர் சென்னை திரும்ப இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் சென்னை விமான நிலையத்தில் ரஜினியை பார்த்ததும் ரசிகர்கள் உற்சாகத்தில் ’தலைவர்’ என்று கோஷமிட்ட புகைப்படங்கள் வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

ரஜினிகாந்த் அபுதாபியில் ஓய்வெடுத்துவிட்டு சென்னை திரும்பியதும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் ’கூலி’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்கும் என்றும் அதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், அனிருத் இசையில் உருவாகும் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் தேர்வு கிட்டத்தட்ட முடிந்து விட்டதாகவும் விரைவில் இது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

More News

இந்த ஆண்டு எந்த குளறுபடிகளும் இருக்க கூடாது.. ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு விஜய் உத்தரவு..!

கடந்த ஆண்டு தளபதி விஜய் கல்வி விருது விழா நடத்தி 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு பொது தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ மாணவிகளுக்கு ரொக்க பரிசு வழங்கினார்

மீண்டும் இணையும் வெற்றிக்கூட்டணி.. சசிகுமாருக்கு ஒரு சக்சஸ் திரைப்படம் பார்சல்..!

கடந்த ஆண்டு சசிகுமார் நடித்த சூப்பர் ஹிட் படம் வெளியான நிலையில் அதே பட இயக்குனருடன் மீண்டும் சசிக்குமார் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தை தயாரிக்கும் தயாரிப்பு

இந்தியாவின் முதல் VFX இயக்குனர் நான் தான்: 1995ல் வெளியான படம் குறித்து 'கோட்' பட நடிகர்..!

இந்தியாவின் முதல் VFX இயக்குனர் நான்தான் என்று 'கோட்' படத்தில் நடித்த நடிகர் கடந்த 1995 ஆம் ஆண்டு வெளியான தனது படம் குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

ஒரே நேரத்தில் 'இந்தியன் 2' 'இந்தியன் 3' பார்க்க வாய்ப்பு.. வேற லெவலில் யோசித்த ஷங்கர்..!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில், உருவாகி இருக்கும் 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகளும் கிட்டத்தட்ட முடிவடைந்து

இந்த வேலை எல்லாம் எங்களிடம் எடுபடாது: மம்முட்டி, கமல், விஜய் குறித்து கேரள அமைச்சர்..!

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் மம்முட்டி நடித்த திரைப்படம் திடீரென தற்போது சர்ச்சைக்கு உள்ளாகிய நிலையில் மம்முட்டிக்கு ஆதரவாக கேரள அமைச்சர் 'இந்த வேலை எல்லாம் எங்களிடம் எடுபடாது'