சினிமா உலகம் ஒரு திறமைசாலியை இழந்துவிட்டது: ஸ்ரீதேவி மரணம் குறித்து ரஜினிகாந்த்

  • IndiaGlitz, [Sunday,February 25 2018]

பிரபல நடிகை ஸ்ரீதேவி நேற்று இரவு மரணம் அடைந்த செய்தி ஒவ்வொரு சினிமா ரசிகனுக்கு பேரிடியான செய்தியாக இருந்தது. அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து சமூக வலைத்தளங்களில் பதிவுகள் குவிந்து வருகிறது.

இந்த நிலையில் சற்றுமுன்னர் உலக நாயகன் கமல்ஹாசன் தனது சமூக வலைத்தளத்தில் ஸ்ரீதேவிக்கு இரங்கல் தெரிவித்ததை பார்த்தோம். இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது டுவிட்டரில் ஸ்ரீதேவி மரணம் குறித்து கூறியதாவது: நான் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். நான் ஒரு அன்பான நண்பனை இழந்துவிட்டேன், சினிமா உலகம் ஒரு உண்மையான திறமைசாலியை இழந்துவிட்டது. என் இதயம் அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் வருந்துகிறது. அவர்களுடைய வேதனையை உணர்கிறேன். அவரது ஆன்மா சாந்தி அடையட்டும்' என்று கூறியுள்ளார்.

ரஜினிகாந்த்துடன் ஸ்ரீதேவி, மூன்று முடிச்சு, காயத்ரி, 16 வயதினிலே, தர்மயுத்தம், ஜானி, ராணுவ வீரன், தனிக்காட்டு ராஜா, போக்கிரி ராஜா, அடுத்த வாரிசு, நான் அடிமை இல்லை போன்ற படங்களில் நடித்துள்ளார்.

More News

ஸ்ரீதேவி மரணம் குறித்து பிரபலங்கள் கூறியது என்ன தெரியுமா?

பிரபல நடிகை ஸ்ரீதேவி மரணம் குறித்து உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகியோர் கூறியதை ஏற்கனவே பார்த்தோம்.

இதையும் நான் பார்க்க நேர்ந்தது கொடுமை: ஸ்ரீதேவி மரணம் குறித்து குறித்து கமல்

பிரபல நடிகை ஸ்ரீதேவி நேற்று இரவு ஐக்கிய அரபு அமீரகத்தின் ராஸ் அல்-கைமா நகரில் திருமண நிகழ்ச்சிக்காக சென்றவர் மாரடைப்பால் திடீரென காலமானார்.

தமிழ்நாட்டுகே ஒரு அபாய போர்டு வைக்க வேண்டும்: கமல்ஹாசன்

உலக நாயகன் கமல்ஹாசன் சமீபத்தில் அரசியல் கட்சிகள் ஆரம்பித்து அந்த கட்சியை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் தீவிர முயற்சியில் உள்ளார்.

நடிகை ஸ்ரீதேவி காலமானார்: ரசிகர்கள் அதிர்ச்சி

நடிகை ஸ்ரீதேவி துபாயில் குடும்ப நண்பர் ஒருவரின் திருமணத்திற்கு கலந்து கொள்ள சென்றிருந்த நிலையில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 54

இறந்தது போல் நடித்து உயிர் பிழைத்தேன்: கொள்ளையர்களிடம் இருந்து தப்பிய மென்பொறியாளர் லாவண்யா

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த மென்பொறியாளர் லாவண்யா, பணியை முடித்துவிட்டு இரவில் சென்னை பெரும்பாக்கத்தில் இருந்து திரும்பி கொண்டிருந்தபோது மூன்று கொள்ளையர்களால் வழிமறிக்கப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டார்.