காவிரி தீர்ப்பு குறித்து ரஜினி என்ன சொன்னார் தெரியுமா?

  • IndiaGlitz, [Friday,February 16 2018]

தமிழகம், கர்நாடகம் ஆகிய இரு மாநிலங்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக நடந்து வந்த காவிரி பிரச்சனைக்கு இன்று சுப்ரீம் கோர்ட் இறுதி தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பின்படி தமிழகத்திற்கு கர்நாடகம் 177.25 டிஎம்சி தண்ணீரை தர வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது. ஆனால் இந்த தீர்ப்புக்கு முன்பு 192 டிஎம்சி தண்ணீர் வழங்க நடுவர்மன்றம் வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த தீர்ப்பால் தமிழக விவசாயிகள் கவலை அடைந்துள்ள நிலையில் இந்த தீர்ப்பு குறித்து அரசியல் கட்சி தலைவர்களும், திரையுலக பிரபலங்களும் தங்களுடைய கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். இந்த தீர்ப்பு குறித்து கமல் உள்பட பலர் தங்களை கருத்துக்களை தெரிவித்துவிட்ட நிலையில், கர்நாடகத்திற்கு சாதகமாக வந்துள்ள இந்த தீர்ப்பு குறித்து ரஜினி என்ன சொல்ல போகிறார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடம் ஏற்பட்டது.

இந்த நிலையில் ரஜினிகாந்த் தனது சமூக வலைத்தள பக்கத்தில் இந்த தீர்ப்பு குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். இதன்படி ''காவிரி நீர் பங்கீட்டில் உச்சநீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேலும் பாதிப்பதாக உள்ளதால் மிகுந்த ஏமாற்றமளிக்கிறது.மறு பரிசீலனை மனு தாக்கல் செய்ய தமிழகஅரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறியுள்ளார்.

More News

கமல்ஹாசனுடன் இந்து மக்கள் கட்சி தலைவர் திடீர் சந்திப்பு

நடிகர் கமல்ஹாசன் வரும் 21ஆம் தேதி அரசியல் கட்சி தொடங்கவுள்ள நிலையில் அவரை சில அரசியல் தலைவர்களும், அவர் சில அரசியல் தலைவர்களையும் சந்தித்து வருகிறார்.

கார்த்திக் சிதம்பரம் ஆடிட்டர் திடீர் கைது! அமலாக்கத்துறை அதிரடி

என்எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பாக கார்த்திக் சிதம்பரம் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில் இன்று கார்த்திக் சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர் ராமனை அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீரென கைது செய்துள்ளனர்.

தேசிய விருது பெற்ற பட இயக்குனரின் அடுத்த படத்தில் ஜீவா

கடந்த 2016ஆம் ஆண்டு பிரபல பத்திரிகையாளர் ராஜூமுருகன் இயக்கிய 'ஜோக்கர்' திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது மட்டுமின்றி சிறந்த தமிழ்ப்படம் என்ற தேசிய விருதையும் பெற்றது.

கமல் கட்சியில் சேருகிறாரா டி.என்.சேஷன்?

உலக நாயகன் கமல்ஹாசன் வரும் 21ஆம் தேதி புதிய அரசியல் கட்சியை தொடங்கவுள்ள நிலையில் அவருடைய கட்சியில் பல விஐபிக்கள் அன்றைய தினம் இணைவார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது

லெஸ்பியன் ஆகும் ஓவியா: ஆதரவு கொடுக்கும் நெட்டிசன்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழின் உச்சிக்கு சென்ற நடிகை ஓவியா தற்போது ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் 'காஞ்சனா 3', மற்றும் 'களவாணி 2' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.