யார் நீங்க? ரஜினிக்கு அதிர்ச்சி கொடுத்த தூத்துகுடி இளைஞர்

  • IndiaGlitz, [Wednesday,May 30 2018]

தூத்துகுடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் பலியானவர்கள் குடும்பத்தினர்களுக்கு ஆறுதல் கூறவும், படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை சந்திக்கவும் இன்று நடிகர் ரஜினிகாந்த் தூத்துகுடிக்கு சென்றார். உயிரிழந்தோர் குடும்பத்தினர்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு ரூ.10 ஆயிரம் மற்றும் உடை, பழங்களும் கொடுத்து ஆறுதல் கூறினார்

இந்த நிலையில் ஒரு இளைஞரை மருத்துவமனையில் ரஜினி சந்தித்தபோது, 'அந்த இளைஞர் யார் நீங்க' என்று கேட்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது அதற்கு ரஜினி சிரித்தபடியே ஏதோ கூறினார். ஆனால் அவர் என்ன கூறினார் என்பது அந்த வீடியோவில் தெளிவாக இல்லை. இருப்பினும் அவரது முகத்தில் அதிர்ச்சி இருந்ததை மட்டும் கவனிக்க முடிகிறது.

இந்த வீடியோவை ரஜினியின் எதிர்ப்பாளர்கள் மற்றும் ஒருசில நெட்டிசன்கள் அதிகளவில் ஷேர் செய்து வருகின்றனர். இருப்பினும் துப்பாக்கி சூடு சம்பவத்தில் காயம் அடைந்த பலர் ரஜினிக்கு நன்றி கூறினர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'காலா' படத்திற்கு தடை: கொந்தளித்த விஷால்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' திரைப்படத்திற்கு கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தடை விதித்துள்ளது. காவிரி பிரச்சனையில் ரஜினியின் குரல் தமிழகத்திற்கு ஆதரவாக இருந்ததால் கன்னட அமைப்புகள்

போராட்டம் குறித்து ரஜினி கூறிய கருத்துக்கு பிரபலங்களின் ரியாக்சன்

தூத்துகுடியில் இன்று பேட்டியளித்த ரஜினிகாந்த், போராட்டம் செய்யும்போது மக்கள் கவனமாக இருக்க வேண்டும். சமூக விரோதிகள் போராட்டத்தில் ஊடுருவதால் கலவரமாக வெடிக்கின்றது

ஜெயலலிதாவின் வழியை தமிழக அரசு பின்பற்ற வேண்டும்: தூத்துகுடியில் ரஜினிகாந்த் பேட்டி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தூத்துகுடிக்கு சென்று துப்பாக்கி சூடு சம்பவத்தில் காயம் அடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:

கூவத்தூர் ரகசியத்தை சொல்லவும் தயங்க மாட்டேன். கருணாஸ்

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதவி விலகும்வரை இனி திமுக எம்.எல்.ஏக்கள் சட்டமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்க மாட்டார்கள் என்று திமுக நேற்று கூறிய நிலையில்

தமிழ்நாடே உங்களை நம்பிதான் உள்ளது. காயமடைந்த தூத்துகுடி நபர் உணர்ச்சிவசம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தூத்துகுடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற சென்றார் என்பது தெரிந்ததே.