மீண்டும் தாத்தா ஆகவிருக்கும் ரஜினிகாந்த்: குடும்பத்தினர் மகிழ்ச்சி!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு ஏற்கனவே மூன்று பேரன்கள் இருக்கும் நிலையில் தற்போது மீண்டும் அவர் தாத்தாவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் கடந்த 2010ஆம் ஆண்டு அஸ்வின் ராம்குமார் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 2015ஆம் ஆண்டு வேத் என்ற மகன் பிறந்த நிலையில் 2017ஆம் ஆண்டு இந்த தம்பதிகள் சட்டபூர்வமாக பிரிந்தனர்.

இதனை அடுத்து சௌந்தர்யா ரஜினிகாந்த் விசாகன் வணங்காமுடி என்பவரை 2019ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த தம்பதிகள் சந்தோஷமாக வாழ்ந்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சௌந்தர்யா சமீபத்தில் கர்ப்பமாக இருந்ததாகவும் அவரது வளைகாப்பு நிகழ்ச்சி விசாகனின் வீட்டில் சிறப்பாக நடைபெற்றதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் வரும் அக்டோபர் மாதம் சௌந்தர்யாவுக்கு குழந்தை பிறக்கும் என ரஜினியின் குடும்ப மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனை அடுத்து இன்னும் ஓரிரு மாதத்தில் ரஜினிகாந்த் நான்காவது முறையாக தாத்தா ஆக உள்ளதை அடுத்து அவரது குடும்பத்தினர் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.