மற்றவர்கள் சத்தம் போட்டால் போடட்டும்: யாரை சொல்கிறார் ரஜினி

  • IndiaGlitz, [Friday,February 23 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் வெகுவிரைவில் தனது அரசியல் கட்சியை அதிகாரபூர்வமாக அறிவிக்கவுள்ள நிலையில் சற்றுமுன் சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நெல்லை மாவட்ட ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து பேசி வருகிறார். முந்தைய ரசிகர் மன்ற கூட்டங்களில் காணொளி காட்சியில் மட்டும் பேசிவந்த ரஜினிகாந்த் முதல் முறையாக நெல்லை மாவட்ட நிர்வாகிகளிடம் நேரில் கலந்துரையாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கூட்டத்தில் ரஜினிகாந்த் பேசியதாவது:

இன்று நெல்லை மாவட்ட ரசிகர்களை சந்திக்கின்றேன்.. அனைத்து ரசிகர்களையும் சந்திக்க சில நாட்கள் ஆகும். மற்றவர்கள் சத்தம் போட்டால் போடட்டும்; நாம் வேலையை அமைதியாக வேலை செய்வோம். எனது ரசிகர்களுக்கு யாரும் அரசியல் பாடம் கற்றுத்தர தேவையில்லை; அவர்கள்தான் மற்றவர்களுக்கு கற்றுத்தருவார்கள்.

அரசியலில் அடிப்படை கட்டமைப்பு தான் முக்கியம். பெரிய கட்சிகள் தோல்விகளை சந்தித்தாலும் அதன் கட்டமைப்புதான் அந்த கட்சிகளை பாதுகாத்து வருகிறது. குடும்பத்துக்குள் ஒற்றுமை எவ்வளவு முக்கியமோ அதே மாதிரி கட்சிக்குள்ளும் இருக்கவேண்டும். ரஜினி மக்கள் இயக்கம் 32 ஆண்டுகளாக கவனத்துடன் திட்டமிட்டு கட்டமைக்கப்பட்டது; இதனை மேலும் பலப்படுத்துவதே நமது நோக்கம்

இவ்வாறு ரஜினிகாந்த் பேசி வருகிறார்.

More News

கமல்-ரஜினி அரசியலில் கார்ப்பரேட் பிரமுகர்கள்

உலக நாயகன் கமல்ஹாசன் ஏற்கனவே அரசியல் கட்சி தொடங்கிவிட்டு அரசியல் பயணத்தை ஆரம்பித்துவிட்டார். அதேபோல் மிக விரைவில் தனது அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அறிவிக்கவுள்ளார்.

கனடா பிரதமரை வாழ்த்தி வரவேற்ற ஆஸ்கார் நாயகன்

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது குடும்பத்தினர்களுடன் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.

நீங்க நிம்மதியா இருக்கிங்களா? அப்ப இந்த வீடியோவை பார்க்காதீங்க: கமல்ஹாசன்

உலக நாயகன் கமல்ஹாசன் நேற்று முன் தினம் அரசியல் கட்சியை ஆரம்பித்து தற்போது கட்சிக்கு உறுப்பினர்களை சேர்க்கும் தீவிர முயற்சியில் உள்ளார்.

இன்று உலகமே ஒரு தமிழனை பார்த்து தலைநிமிர்ந்த நாள் தெரியுமா?

ஆஸ்கார் விருது என்பது பொதுவாக இந்திய கலைஞர்களுக்கு ஒரு எட்டாத கனியாகத்தான் இருந்தது. சத்யஜித்ரே போன்ற ஒருசிலர் மட்டுமே அந்த விருதை பெற்றுள்ளனர்.

வைரலாகும் விஜய்யின் செயல்

ஒவ்வொரு பெரிய நடிகரின் ரசிகர்களும், தங்களுடைய அன்புக்குரிய நடிகரை நேரில் பார்க்கும்போது பெரிய மாலையை அவரது கழுத்தில் போட்டு அழகு பார்க்கும் வழக்கம் உண்டு.