தேர்தல் நெருங்க நெருங்க அரசியல் சுனாமி ஏற்படும்: ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இன்று ரங்கராஜ் பாண்டே அவர்களின் சாணக்கியா சேனல் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:

நான் ஒரு புள்ளி போட்டேன். அந்த புள்ளி இப்போது அமைதியான சூழலாக மாறியுள்ளது. அந்த மெல்ல மெல்ல அலையாக மாறும். அலையாக மாற்ற இந்த ரஜினிகாந்த் வருவான். ரஜினி ரசிகர்களும் வருவார்கள். அந்த அலை கரையை நெருங்க நெருங்க, அதாவது தேர்தல் நெருங்க நெருங்க அரசியல் சுனாமியாக மாறும், அதிசயம் அற்புதம் நடக்கும்’ என்று ரஜினிகாந்த் பேசினார்.

மேலும் தேர்தல் அரசியல் சுனாமி ஏற்படுத்துவது என்பது ஆண்டவன் கையில் இருக்கிறது. ஆனால் ஆண்டவன் மக்களாகிய நீங்கள் தான். மேலும் எல்லார் பேச்சையும் கேட்கிறவனும் உருப்பட மாட்டான். யார் பேச்சையும் கேட்காதவனும் உருப்பட மாட்டான்’ என்று ரஜினிகாந்த் பேசினார். ரஜினியின் இன்றைய பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More News

இந்த வாரம் வெள்ளியன்று புதிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆகுமா?

கொரோனா வைரஸ் பீதி காரணமாக உலகம் முழுவதும் ஷாப்பிங் மால்கள் திரையரங்குகள் ஆகியவை மூடப்பட்டு வருகின்றன. இந்தியாவிலும் ஒரு சில மாநிலங்களில் திரையரங்குகளை மூடவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளன

கொரோனா வைரஸ் எதிரொலி: இன்று ஒரே நாளில் 6 லட்சம் கோடி ரூபாய் நஷ்டம் அடைந்த இந்தியர்கள்

கொரோனா வைரஸ் காரணமாக உலகமெங்கும் பொருளாதார சரிவு ஏற்பட்டிருக்கும் நிலையில் கடந்த சில நாட்களாக இந்திய பங்குசந்தைகள் பெரும் சரிவை சந்தித்து வருகிறது.

மற்றோர் பேராபத்து!!! 1990 களை விட 6 மடங்கு அதிகமாக உருகும் துருவப் பனிக்கட்டிகள்!!!

உலகம் முழுக்க தற்போது கொரோனா பற்றிய பாதிப்புகள் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகின்றன.

தமிழக பள்ளி, கல்லூரிகளை மூட முதல்வர் ஈபிஎஸ் உத்தரவு!

கொரோனா  வைரஸ் காரணமாக எல்கேஜி யுகேஜி வகுப்புகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை

கொரோனா எதிரொலி: துப்பாக்கி வாங்க நீண்ட வரிசையில் நிற்கும் பொதுமக்கள்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பீதி காரணமாக மால்கள், கடைகள் ஆகியவை மூடப்பட்டு வரும் நிலையில் அத்தியாவசிய பொருட்களை வாங்கி குவிக்க மக்கள் முன் வந்து கொண்டிருக்கின்றனர்.