கமல்ஹாசனின் மறக்க முடியாத இரண்டு நாட்கள்: ரஜினிகாந்த்

  • IndiaGlitz, [Friday,November 08 2019]

கமல்ஹாசனின் பிறந்த நாள் நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்ட நிலையில் அவர் தனது தந்தையின் சிலையை நேற்று திறந்து வைத்தார். இந்த நிலையில் இன்று இயக்குனர் திலகம் கே.பாலசந்தரின் சிலையை கமல்ஹாசன் தன்னுடைய புதிய அலுவலகத்தில் திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் உள்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்

இந்த விழாவில் பேசிய ரஜினிகாந்த், ‘கமல்ஹாசனுக்கு நேற்றும் இன்றும் மறக்க முடியாத நாள். பெற்ற தந்தைக்கும் கலையுலக தந்தைக்கும் கமல்ஹாசன் சிலை அமைத்துள்ளார்.

என்னைப்போல பல கலைஞர்களுக்கு தந்தை, பிதாமகன், குரு பாலச்சந்தர் அவர்கள்தான். பாலசந்தருக்கு மிகவும் பிடித்த குழந்தை கமல்ஹாசன் தான். கமல்ஹாசனின் ஹே ராம் படத்தையும், அபூர்வ சகோதரர்கள் படத்தையும் பார்த்துவிட்டு நான் ரொம்ப வியந்தேன். அதேபோல் ராஜபார்வை’ என்று டைட்டில் வைத்துவிட்டு கண் தெரியாதவராக் நடிப்பதா? என சிவாஜியே வியந்தார்.

கமல்ஹாசன் புதிய அலுவலகம் திறந்திருப்பதை பார்த்தால் அரசியலுக்கு வந்தாலும் அவர் தனது தாய்வீடான சினிமாவை விடமாட்டார் என்றே தோன்றுகிறது.

இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்

More News

ஆர்ஜே பாலாஜியின் அடுத்த படத்தில் லேடி சூப்பர் ஸ்டார்?

ஆர்ஜே பாலாஜி நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியான 'எல்.கே.ஜி' திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது என்பது தெரிந்ததே. இந்த படம் வசூல் அளவிலும் விமர்சனங்கள்

தர்ஷன் மனுசனே இல்லை: ஆவேசமான காதலி சனம்ஷெட்டி

பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் தற்கொலை முயற்சி செய்த மதுமிதா வெளியேற்றப்பட்டார் என்பதும், வெளியேறிய பின்னர் சேரன், கஸ்தூரி தவிர மற்ற அனைவர் மீது அவர் குற்றஞ்சாட்டினார்

சிறப்பு அதிகாரி நியமனம் குறித்து அதிரடி கருத்து தெரிவித்த நடிகர் சங்க நிர்வாகிகள்

நடிகர் சங்கம் சரியான வகையில் செயல்படவில்லை என்ற காரணத்தை காட்டி, அச்சங்கத்திற்கு இன்று சிறப்பு அதிகாரியை தமிழக அரசு நியமனம் செய்துள்ளது.

கோட்டையை எட்டி பார்க்கும் கமல்ஹாசன்: ஷங்கரின் வித்தியாசமான வாழ்த்து!

உலக நாயகன் கமல்ஹாசன் இன்று தனது 65வது பிறந்த நாளையும் சினிமாவில் அறிமுகமாகி 60 ஆண்டுகள் நிறைவு பெறுவதையும் கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்

காற்று மாசால் கடவுளுக்கும் மாஸ்க் அணிவித்த பக்தர்கள்

கடந்த சில நாட்களாக டெல்லியில் காற்றின் மாசு அதிகரித்ததை அடுத்து அப்பகுதி மக்கள் கடும் சிரமத்தில் உள்ளனர். இதுகுறித்து மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு