தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எப்படி இருக்கிறது? ரஜினிகாந்த் பதில்..!

  • IndiaGlitz, [Monday,July 15 2024]

பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி மகன் ஆனந்த் அம்பானி திருமணத்தில் கலந்து கொண்டு சென்னை திரும்பிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எப்படி இருக்கிறது என்ற கேள்வி உட்பட பல கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.

இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி மகன் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் கடந்த மூன்று நாட்களாக நடந்த நிலையில் இந்த திருமணத்தில் தமிழ் திரையுலக சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.

இந்த திருமணத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது மனைவி, மகள், மருமகனுடன் கலந்து கொண்ட நிலையில் இது குறித்த புகைப்படங்கள் வீடியோக்கள் வைரல் ஆகியது. குறிப்பாக இந்த திருமண விழாவின் போது ரஜினிகாந்த் டான்ஸ் ஆடிய வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் திருமணம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரஜினிகாந்த் சென்னை திரும்பி நிலையில் அவரிடம் செய்தியாளர்கள் சில கேள்விகளை கேட்டனர். அப்போது அம்பானி வீட்டில் திருமண நிகழ்ச்சி குறித்து ரஜினிகாந்த் கூறிய போது ’அம்பானி வீட்டு கடைசி திருமணம், மிகவும் சிறப்பாக நடந்தது, அந்த திருமணத்தில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி என்றும் தெரிவித்தார்.

மேலும் ’இந்தியன் 2’ படம் குறித்த கேள்விக்கு பதிலளித்த ரஜினிகாந்த், ‘ நான் இன்னும் அந்த படத்தை பார்க்கவில்லை, விரைவில் பார்க்க இருக்கிறேன்’ என்று தெரிவித்தார். இதனை அடுத்து தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு குறித்த கேள்விக்கு அவர் ’நோ கமெண்ட்ஸ்’ என்று கூறிவிட்டு சென்றுவிட்டார். அவரது இந்த பேட்டியின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.