'அயலான்' படம் பார்த்துவிட்டு ரஜினி சொன்ன ஒரு வார்த்தை: சிவகார்த்திகேயன் பெருமிதம்..!

  • IndiaGlitz, [Friday,January 26 2024]

சிவகார்த்திகேயன் நடித்த ‘அயலான்’ படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பார்த்துவிட்டு சொன்ன ஒரு வார்த்தை தனக்கு மிகவும் பெருமையாக இருப்பதாக சிவகார்த்திகேயன் சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

சிவகார்த்திகேயன் நடிப்பில், ரவிக்குமார் இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையில் உருவான ‘அயலான்’ திரைப்படம் பொங்கல் விருந்தாக ஜனவரி 12ஆம் தேதி வெளியானது. இந்த படம் இரண்டே வாரத்தில் 75 கோடி ரூபாய் உலகம் முழுவதும் வசூல் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.

மேலும் இன்று இந்த படம் தெலுங்கு மாநிலங்களில் வெளியாக உள்ள நிலையில் தெலுங்கு ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த சிவகார்த்திகேயன், ‘சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த படத்தை பார்த்து தன்னை பாராட்டியதாக தெரிவித்துள்ளார். நீங்கள் எப்போதும் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடிக்கிறீர்கள், நீங்கள் வித்தியாசமான படங்களை நடிப்பது தனக்கு மிகவும் பிடித்திருப்பதாக ரஜினிகாந்த் கூறியதாக சிவகார்த்திகேயன் தெரிவித்தார்.

அதற்கு சிவகார்த்திகேயன் ’நீங்கள் நடித்த ’எந்திரன்’ ’2.0’ போன்ற படங்கள் தான் எங்களுக்கு உந்துதலாக இருந்தது என்று கூறிய போது உடனே ரஜினி ’தற்போது நீங்கள் எங்களுக்கு உந்துதலாக இருக்கிறீர்கள் என்று கூறியதை நான் பெருமையுடன் கருதுகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

More News

கட்சி தொடங்கும் முன்பே தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் தேர்வா? செம்ம ஸ்பீடில் விஜய்..!

தளபதி விஜய் நேற்று விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை செய்தார் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது வந்துள்ள தகவல்படி விஜய் அரசியல் கட்சி அமைப்பது உறுதி செய்யப்பட்டது

உதிரம் உள்ள கைகளுடன் உதிரன்..  செம்ம அப்டேட்டுடன் 'கங்குவா' புதிய போஸ்டர்..!

சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் 'கங்குவா' படத்தின் படப்பிடிப்பு நிறைவு கட்டத்தை எட்டி உள்ள நிலையில் இந்த படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டு செம அப்டேட்

இலங்கையில் இருந்து பவதாரிணி உடல் சென்னை வருவது எப்போது? சோகமாக காத்திருக்கும் திரையுலகம்..!

இசைஞானி இளையராஜாவின் மகளும் பாடகியுமான பவதாரணி நேற்று இலங்கையில் புற்றுநோய் காரணமாக காலமான நிலையில் அவரது உடல் இன்று மாலை சென்னை வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஜயகாந்துக்கு இந்தியாவின் உயரிய விருது அளித்த மத்திய அரசு.. வேறு யார் யாருக்கு விருது?

கேப்டன் விஜயகாந்துக்கு மத்திய அரசு இந்தியாவின் உயரிய விருதை அளித்து கௌரவித்துள்ளது.

இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரிணி காலமானார்.. புற்றுநோய்க்கு பலியான பரிதாபம்..!

 இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரிணி காலமானார் என்ற செய்தி திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவருக்கு வயது 47.