பெரியார் சிலை விவகாரம்: குரல் கொடுத்தார் ரஜினி

  • IndiaGlitz, [Thursday,March 08 2018]

கடந்த இரண்டு நாட்களாக பெரியார் சிலை விவகாரம் குறித்து தமிழகமே பெரும் பரபரப்பில் உள்ள நிலையில் ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளும் இந்த பிரச்சனைக்கு குரல் கொடுத்து வருகின்றன. இந்த நிலையில் விரைவில் அரசியல் கட்சியை தொடங்கி ஆன்மீக அரசியலில் குதித்து எம்,.ஜி.ஆர் ஆட்சியை தருவேன் என்று கூறிய ரஜினிகாந்த் இதுகுறித்து எவ்வித கருத்தையும் தெரிவிக்கவில்லை என சமூக வலைத்தள பயனாளிகள் குற்றம் சாட்டினர்

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களிடம் இதுகுறித்து கூறிய ரஜினிகாந்த், 'பெரியார் சிலை அகற்றவேண்டும் என பேசியதும், சிலை உடைக்கப்பட்டதும் காட்டுமிராண்டித்தனமானது என்றும் இதனை நான் கடுமையாக கண்டிக்கின்றேன்'' என்றும் கூறியுள்ளார்.

இந்த நிலையில் ரஜினிகாந்த் பெரியார் சிலை குறித்து குரல் கொடுக்கவில்லையே என்று குற்றம் சாட்டிய சமூக வலைத்தள பயனாளிகள் தற்போது 'இரண்டு நாள் கழித்து குரல் கொடுத்துள்ளதாக மீண்டும் குற்றஞ்சாட்டி வருகின்றனர்' என்பது குறிப்பிடத்தக்கது.