நிர்மலாதேவி விவகாரம்: ரஜினி கூறிய கருத்து

  • IndiaGlitz, [Monday,April 23 2018]

 

கடந்த சில நாட்களாக அருப்புக்கோட்டை கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி விவகாரம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தால் பொதுமக்கள், ஊடகங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் காவிரி, ஸ்டெர்லைட் பிரச்சனையை கூட மறந்துவிட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று அமெரிக்கா செல்லவுள்ள நிலையில் சற்றுமுன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் நிர்மலாதேவி விவகாரம் குறித்து கருத்து கூறியபோது, 'நிர்மலா தேவி விவகாரத்தில் விசாரணைக்குபின் குற்றம் நிரூபிக்கப்பட்டால் கடும் தண்டனை வழங்க வேண்டும்' என்று கூறினார். அதேபோல் எஸ்.வி.சேகர் பிரச்சனை குறித்து அவர் கூறுகையில், ''எஸ்.வி.சேகர் பத்திரிக்கையாளர்கள் விவகாரத்தில் தெரிந்து பதிவிட்டாலும் தெரியாமல் பதிவிட்டாலும் அதனை ஏற்றுக் கொள்ள முடியாது' என்று கூறியுள்ளார்.

மேலும் சீருடை அணிந்த காவலர்களை தாக்கியது மன்னிக்க முடியாத குற்றம் என்று அவர் மீண்டும் அழுத்தமாக கூறியுள்ளார். இந்த கருத்துக்கு ஏற்கனவே பாரதிராஜா, சீமான் உள்பட பலர் கண்டனம் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

நிர்மலாதேவியும், ரகசிய பங்களாவும்: பரபரப்பு தகவல்

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டிருக்கும் நிர்மலாதேவி விவகாரத்தில் தோண்ட தோண்ட புதியதாக அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.

கார்த்தி படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பு கொண்டாட்டம்

கார்த்தி நடிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கி வந்த 'கடைக்குட்டி சிங்கம்' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது.

விஷாலின் 'இரும்புத்திரை' ரிலீஸ் தேதி திடீர் மாற்றம்

விஷால், சமந்தா நடித்த 'இரும்புத்திரை' திரைப்படம் வரும் மே மாதம் 11ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று இன்று காலை அறிவிக்கப்பட்டு ரிலீஸ் தேதியுடன்

நடிகர் கின்னஸ் பக்ருவின் புதிய சாதனை

டிஷ்யூம், அற்புதத்தீவு, காவலன், 7ஆம் அறிவு போன்ற தமிழ் படங்களிலும் பல மலையாள படங்களிலும் நடித்தவர் நடிகர் கின்னஸ் பக்ரு. 76செமீ உயரமே உள்ள இவர்,

சென்னை வங்கியில் துப்பாக்கி முனையில் கொள்ளை முயற்சி: பிடிபட்ட வடமாநில வாலிபர்

சென்னை அடையாறு வங்கி ஒன்றில் பட்டப்பகலில் வடமாநில வாலிபர் ஒருவர் துப்பாக்கி முனையில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.