பாதைகள் வேறு என்றாலும் நோக்கம் ஒன்றுதான்: கமல் அரசியல் குறித்து ரஜினிகாந்த்

  • IndiaGlitz, [Friday,February 23 2018]

சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் இன்று நெல்லை ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்த ரஜினிகாந்த் பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

இன்று திருநெல்வேலி மாவட்ட ரசிகர் மன்ற நிர்வாகிகளை நேரடியாக சந்தித்து அவர்களின் தேவைகளை தெரிந்து கொண்டேன். அதேபோல் 32 மாவட்ட நிர்வாகிகளையும் தேர்வு செய்துவிட்டு அவர்கள் அனைவரையும் ஒரே நேரத்தில் சந்திப்பேன். அதேபோல் நேரம் வரும்போது நேரடி சுற்றுப்பயணம் செய்து ரசிகர்களை சந்திப்பேன்.

காவிரி விவகாரத்திற்காக கூட்டப்பட்ட அனைத்து கட்சி கூட்டம் வரவேற்கத்தக்கது. இதுவொரு நல்ல தொடக்கம், இப்படித்தான் இருக்க வேண்டும்

கமல்ஹாசனின் அரசியல் பொதுக்கூட்டம் நன்றாக இருந்தது. நான் முழுவதும் அதை பார்த்தேன். நான் ஏற்கனவே அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளேன். இன்று மீண்டும் அவருக்கு நான் வாழ்த்து கூறிக்கொள்கிறேன்.

நானும் கமலும் வேறு வேறு பாதையில் சென்றாலும் எங்களின் நோக்கம் மக்களுக்கு நல்லது செய்வது என்பதுதான். கமல் நல்ல திறமைசாலி, நிச்சயம் அவர் தனது இயக்கத்தை வெற்றிகரமாக வழிநடத்தி செல்வார்.