close
Choose your channels

அறவழி போராட்டத்தில் கமல்-ரஜினி: களைகட்டியது வள்ளுவர் கோட்டம்

Sunday, April 8, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அறவழி போராட்டத்தில் கமல்-ரஜினி: களைகட்டியது வள்ளுவர் கோட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று நடிகர் சங்கம் உள்பட மூன்று அமைப்புகள் இணைந்து நடத்தி வரும் அறவழி போராட்டம் காலை 9 மணி முதல் நடந்து வருகிறது. இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள கமல், விஜய், விக்ரம், சூர்யா, தனுஷ் உள்பட பல நடிகர்களும், இளையராஜா, வைரமுத்து, எஸ்பி. முத்துராமன் உள்பட பல திரையுலக பிரபலங்களும் கலந்து கொண்டனர்

இந்த அறவழி போராட்டத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சற்றுமுன் கலந்து கொண்டார். அவரை திரையுலக பிரபலங்கள் அனைவரும் வரவேற்றனர். இந்த போராட்டம் மதியம் 2 மணி வரை நடைபெறும் என்றும், அதுவரை கமல், ரஜினி உள்பட அனைவரும் போராட்டத்தில் இருப்பார்கள் என்றும் கூறப்படுகிறது

இந்த போராட்டத்தின் ஆரம்பத்தில் நடிகர் சங்க தலைவர் நாசர் பேசியதாவது: *காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது தமிழர்களின் உரிமை. மத்திய அரசு மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதே நடிகர் சங்கத்தின் கோரிக்கை. ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்திலும் அரசு ஒரு தீர்வு காண வேண்டும். இன்று ஒட்டுமொத்த திரையுலகம் கூடியிருப்பது இந்த இரண்டு பிரச்னைகளுக்காகதான். எனவே நாங்க இந்த இரண்டு பிரச்னைகளுக்காகவும் இன்று மெளனப் போராட்டம் நடத்துகிறோம்' என்று கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment