கருணாநிதி மறைவுக்கு பின் ரஜினி-ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சி

  • IndiaGlitz, [Monday,August 13 2018]

திமுக தலைவராக இருந்த கருணாநிதி கடந்த 7ஆம் தேதி சென்னையில் காலமானதை அடுத்து அவரது உடல் மறுநாள் முழு அரசு மரியாதையுடன் சென்னை அண்ணா நினைவிட வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது நினைவிடத்தில் திமுக தொண்டர்களும், பொதுமக்களும் கடந்த ஆறு நாட்களாக தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் சென்னையில் நடிகர் சங்கம் சார்பில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டது. இந்த நிகழ்ச்சி தற்போது சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடந்து வருகிறது. இந்த நினைவேந்தல் நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்றுள்ளார்.

மேலும் நடிகர் சங்க நிர்வாகிகளான நாசர், விஷால், கார்த்தி, பொன்வண்ணன், நடிகர்கள் விஜயகுமார், ராதாரவி, நடிகை குஷ்பு, இயக்குநர்கள் எஸ்.பி.முத்துராமன், விக்கிரமன் உள்பட ஏராளமான திரையுலகினர் இந்த நினைவேந்தல் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். மேலும் இந்த நினைவேந்தல் நிகழ்ச்சில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களும் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் விஷால், 'நடிகர் சங்கத்தின் புதிய கட்டடத்தில் திமுக தலைவர் கருணாநிதி பயன்படுத்திய பேனாவை காட்சிக்கு வைக்க வேண்டும் என்று கூறினார்.

More News

நிவாரண நிதி: தமிழ் நடிகர்களின் தாராளமும், மலையாள நடிகர்களின் கஞ்சத்தனமும்

கேரளாவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் வரலாறு காணாத கனமழை காரணமாக அந்த மாநிலம் முழுவதும் வெள்ளத்தின் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை 40 பேர் பலியாகியுள்ளதாகவும்,

சிலர் செத்தால்தான் நாட்டுக்கு விமோசனம்: தமிழக அமைச்சரின் சர்ச்சை பேச்சு

கருணாநிதி கடந்த வாரம் காலமான சோகத்தில் இருந்து இன்னும் திமுகவினர் மீண்டு வரவில்லை. இந்த நிலையில் அமைச்சர் உதயகுமார், 'சிலர் செத்தால்தான் நாட்டுக்கு விமோசனம்' என்று கூறியுள்ளார்.

போலீஸ் எச்சரிக்கையை மீறி காஜல் அகர்வால் வெளியிட்ட வீடியோ

தற்போது உலகம் முழுவதும் ஆபத்தான டிரெண்ட்டை ஏற்படுத்தி வருவது கிகி சேலஞ்ச் என்பது தெரிந்ததே. காரில் இருந்து திடீரென இறங்கி சாலையில் நடனமாடும் இந்த சேலஞ்சால் விபத்துக்கள்

செக்க சிவந்த வானம்: அரவிந்தசாமி கேரக்டர் அறிவிப்பு

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கி வரும் 'செக்க சிவந்த வானம்' திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்து தற்போது போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் இரவுபகலாக நடந்து வருகிறது.

சுவாரஸ்யமின்றி திணறும் பிக்பாஸ்: இனியாவது தேறுமா?

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் முடிய போகிறது. ஆனால் கமல் உள்பட இன்னும் ஒருவர் கூட பார்வையாளர்களின் மனதை தொட முடியவில்லை.