ரஜினிகாந்த் குறித்து பரவி வரும் வதந்திக்கு ஒரு விளக்கம்

  • IndiaGlitz, [Thursday,October 10 2019]

சீன அதிபர் ஜீ ஜின்பிங் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகிய இருவரும் நாளை சென்னை அருகே உள்ள மாமல்லபுரத்திற்கு வருகை தர உள்ளனர். நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய இரண்டு நாட்களிலும் இரு தலைவர்களும் பல்வேறு முக்கிய ஆலோசனைகள் செய்ய உள்ளனர்

இந்த நிலையில் சீன அதிபருக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஒரு விருந்து அளிக்க உள்ளதாகவும் அந்த விருந்தில் முக்கிய தலைவர்கள் அரசியல்வாதிகள் பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளதாகவும் செய்திகள் வந்தது. இந்த விருந்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் ஒரு வதந்தி மிக வேகமாக பரவி வருகிறது

இந்த நிலையில் தற்போது ரஜினி தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. சீன அதிபருக்கு இந்திய பிரதமர் அளிக்கும் விருந்தில் ரஜினிகாந்த் அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்றும், அவ்வாறு பரவி வரும் தகவல் பொய்யானது என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக வெளிவந்து கொண்டிருக்கும் செய்தி தவறானது என்றும் பிரதமர் அலுவலகத்தில் இருந்து அப்படி எந்த ஒரு அழைப்பும் வரவில்லை என்றும் திமுக தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டுள்ளது
 

More News

பிக்பாஸ் நிகழ்ச்சியால் வாய்ப்புகளை இழந்து வரும் மீராமிதுன்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் உலகம் முழுவதும் புகழ் பெறலாம், கோலிவுட் வாய்ப்புகள் குவியும், கோடிக்கணக்கில் சம்பாதிக்கலாம் என பிக்பாஸில் கலந்து கொண்டவர்கள் கூறுவதுண்டு.

அருண்விஜய்யின் அடுத்த படத்தின் இசையமைப்பாளர் அறிவிப்பு

'என்னை அறிந்தால்', செக்க சிவந்த வானம்' தடம் என தொடர் வெற்றிப்படங்களை கொடுத்து வரும் அருண்விஜய், தற்போது 'அக்னி சிறகுகள்', பாக்ஸர்'மற்றும் மாபியா போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

'மிக மிக அவசரம்' ரிலீஸில் திடீர் மாற்றம்

சுரேஷ் காமாட்சி இயக்கத்தில் உருவாகிய 'மிக மிக அவசரம்' திரைப்படம் நாளை வெளியாக திட்டமிடப்பட்டு அதற்கான புரமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்றது.

ஜெயம் ரவியின் அடுத்த படத்தில் இணைந்த 'காலா' வில்லன்!

ஜெயம்ரவி நடித்த 'கோமாளி' திரைப்படம் கடந்த ஆகஸ்ட் மாதம் சுதந்திர தினத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய லாபத்தை கொடுத்தது

மணிரத்னம் மீதான தேசத்துரோக வழக்கு: பீகார் போலீஸின் அதிரடி முடிவு

மணிரத்னம் உள்பட 49 திரையுலக பிரபலங்கள் மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்ய சமீபத்தில் பீகார் நீதிமன்றம் அனுமதி அளித்ததை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில்