விஜயகாந்தின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது! தீவுத்திடலில் அஞ்சலி செய்த ரஜினிகாந்த் பேட்டி..!

  • IndiaGlitz, [Friday,December 29 2023]

கேப்டன் விஜயகாந்த் நேற்று காலமான நிலையில் ஏராளமான அரசியல் பிரபலங்கள் திரையுலக பிரபலங்கள் அவருக்கு நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தற்போது அவரது உடல் சென்னை தீவு திடலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் தகுந்த பாதுகாப்புடன் பொதுமக்கள் அஞ்சலி செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தூத்துக்குடியில் வேட்டையன் படத்தின் படப்பிடிப்பில் இருந்த நிலையில் படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு சென்னை திரும்பினார். இன்று காலை அவர் தீவு திடல் சென்று விஜயகாந்த்துக்கு அஞ்சலி செலுத்தினார்.

அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது விஜயகாந்த்தை இழந்தது மிகப்பெரிய துரதிஷ்டம். அவரது இழப்பு ஈடு செய்ய முடியாதது. மனதிற்கு மிகவும் கஷ்டமாக உள்ளது. அவருடைய அசாத்திய மன உறுதி காரணமாக எப்படியும் உடல்நிலை தேறி வந்து விடுவார் என்று தான் நினைத்தேன். ஆனால் சமீபத்தில் நடந்த பொது குழுவில் அவரை பார்த்தபோது எனக்கு கொஞ்சம் நம்பிக்கை குறைந்துவிட்டது.

அவர் மட்டும் ஆரோக்கியமாக இருந்திருந்தால் தமிழக அரசியலில் மிகப்பெரிய சக்தியாக இருந்திருப்பார். தமிழக மக்கள் அந்த பாக்கியத்தை இழந்துவிட்டனர். அவர் ஆத்மா சாந்தி அடையட்டும் என்று தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த், விஜயகாந்த், இரங்கல்,

More News

அரசியலுக்கு வரப்போவதாக சொன்னீர்களே.. எப்போது வருவீர்கள்? அஜித்துக்கு கேள்வி எழுப்பிய இயக்குனர்..!

நீங்கள் அரசியலுக்கு வருவதாக  பிரபல நடிகர் ஒருவரிடம் சொன்னீர்களே? ஏன் வரவில்லை ? எப்போது வருவீர்கள்? என்று பிரபல இயக்குனர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடுக்கடுக்காக கேள்வி எழுப்பி உள்ளார்  

கமல், ரஜினி, அஜித், விஜய்யை அடுத்து இன்னொரு பிரபல நடிகரின் படத்தில் த்ரிஷா?

 ஒரே நேரத்தில் கமல், ரஜினி, அஜித், விஜய் என 4 முன்னணி நடிகர்களுடன் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை த்ரிஷா, அடுத்ததாக இன்னொரு பிரபல நடிகரின் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  

எல்லோருக்கும் ஒரே உணவு.. பசியாற்றிய வள்ளல்.. விஜயகாந்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் புகழாரம்..!

தேமுதிக தலைவர், புரட்சி கலைஞர் நடிகர் விஜயகாந்த் நேற்று காலமான நிலையில் அவரது உடல் தற்போது சென்னை தீவு திடலில் வைக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள்,

தன்மானத்தை தனது உயிரை விட பெரிதாக கருதியவர் விஜயகாந்த்: நடிகை ராதிகா..

தனது உயிரை விட தன்மானத்தை பெரிதாக கருதியவர் கேப்டன் விஜயகாந்த் என நடிகை ராதிகா புகழாரம் சூட்டியுள்ளார். கேப்டன் விஜயகாந்த் நேற்று காலமான நிலையில் அவருடன் பல திரைப்படங்களில்

'டிக்கெட் டு பினாலே கடைசி டாஸ்க்கில் திடீர் திருப்பம்.. 5 டிக்கெட்டுக்களை வெல்பவர் யார்?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது டிக்கெட் பினாலே என்ற டாஸ்க் நடைபெற்று வரும் நிலையில் தற்போதைய நிலையில் நிக்சன் தான் அதிக டிக்கெட்டுகளை பெற்று முதலிடத்தில் உள்ளார்.