சென்னை திரும்பும் முன் கவர்னரை சந்தித்த ரஜினிகாந்த்.. என்ன காரணம்?

  • IndiaGlitz, [Thursday,August 17 2023]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இமயமலையில் இருக்கும் நிலையில் அவர் இன்று அல்லது நாளை சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் திடீரென அவர் ஜார்கண்ட் மாநில கவர்னர் சிபி ராதாகிருஷ்ணன் அவர்களை சந்தித்துள்ளதாக புகைப்படத்துடன் கூடிய தகவல் வெளியாகியுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’ஜெயிலர்’ திரைப்படம் கடந்த பத்தாம் தேதி வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் இந்த படம் ரூ.400 கோடி வசூலை நெருங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ‘ஜெயிலர்’ திரைப்படம் வெளியாவதற்கு முந்தைய நாள் இமயமலை சென்ற ரஜினிகாந்த் அங்கு சாமியார்கள், நண்பர்களை சந்தித்த புகைப்படங்கள் வெளியாகின.

இந்த நிலையில் தற்போது ஜார்கண்ட் மாநில தலைநகரில் அம்மாநில கவர்னர் சிபி ராதாகிருஷ்ணன் அவர்களை ரஜினிகாந்த் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்று கூறப்படுகிறது. பல ஆண்டுகளாக சிபி ராதாகிருஷ்ணன் அவர்கள் ரஜினிக்கு நண்பராக இருந்து வருகிறார் என்றும் அந்த நட்பின் அடையாளமாக தான் இந்த சந்திப்பு நடந்ததாகவும் கூறப்படுகிறது.