கட்டுப்பாட்டுடன் நடந்த ரசிகர்களின் ஆர்ப்பாட்டம்: ரஜினிகாந்த் பாராட்டு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவில்லை என்றும், அரசியல் கட்சி ஆரம்பிக்கவில்லை என்றும், உடல்நிலை காரணமாக இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் ஏற்கனவே அறிவித்திருந்தார். ஆனால் ரஜினியின் முடிவை ஏற்று கொள்ளாத அவரது ரசிகர்கள் சென்னையில் நேற்று பிரமாண்டமான ஆர்ப்பாட்டத்தை நடத்தி ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர். இந்த நிலையில் ரசிகர்களின் போராட்டத்தை அடுத்து தனது டுவிட்டரில் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில அவர் ரசிகர்களுக்கு கூறியதாவது:

என்னை வாழவைக்கும்‌ தெய்வங்களான ரசிகப்‌ பெருமக்களுக்கு...

நான்‌ அரசியலுக்கு வராதது பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்று சிலர்‌, ரஜினி மக்கள்‌ மன்ற பதவி பொறுப்பிலிருந்தும்‌, மன்றத்துலிருந்தும்‌ நீக்கப்பட்ட பலருடன்‌ சேர்ந்து, சென்னையில்‌ ஓர்‌ நிகழ்ச்சியை
நடத்துயிருக்கிறார்கள்‌.

கட்டுப்பாட்டுடனும்‌, கண்ணியத்துடனும்‌ நடத்தியதற்கு என்னுடைய பாராட்டுகள்‌. இருந்தாலும்‌ தலைமையின்‌ உத்தரவையும்‌ மீறி நடத்‌தியது வேதனையளிக்கிறது. தலைமையின்‌ வேண்டுகோளை ஏற்று, இந்த நிகழ்ச்சியில்‌ கலந்துக்கொள்ளாத மக்கள்‌ மன்றத்‌தினர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி.

நான்‌ ஏன்‌ இப்பொழுது அரசியலுக்கு வரமுடியவில்லை என்பதற்கான காரணங்களை ஏற்கனவே விரிவாக விளக்கியுள்ளேன்‌. நான்‌ என்‌ முடிவை கூறிவிட்டேன்‌. தயவு கூர்ந்து இதற்கு பிறகும்‌ நான்‌ அரசியலுக்கு வர வேண்டுமென்று யாரும்‌ இது போன்ற நிகழ்வுகளை நடத்‌தி என்னை மேலும்‌ மேலும்‌ வேதனைக்கு உள்ளாக்க வேண்டாம்‌ என்று பணிவன்புடன்‌ கேட்டுக்கொள்கிறேன்‌.

வாழ்க தமிழ்‌ மக்கள்‌! வளர்க தமிழ்நாடு!! ஜெய்ஹிந்த்‌!!!

இவ்வாறு ரஜினிகாந்த் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

More News

ஈஸ்வரன் - மாநாடு: பொங்கலுக்கு இரட்டை விருந்து தரும் சிம்பு

சிம்பு நடிப்பில் சுசீந்திரன் இயக்கத்தில் உருவான 'ஈஸ்வரன்' திரைப்படம் வரும் பொங்கல் விருந்தாக ஜனவரி 14-ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக உள்ளது என்பது தெரிந்ததே

மீண்டும் பிஸியாகும் நடிகர் ரஹ்மான்: கைவசம் இத்தனை படங்களா?

கடந்த 1986ஆம் ஆண்டு 'நிலவே மலரே' என்ற திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானவர் நடிகர் ரஹ்மான். இந்த படத்தின் வெற்றியை அடுத்து இயக்குனர் சிகரம் கே பாலச்சந்தரின் 'புதுப்புது அர்த்தங்கள்

62 பயணிகளுடன் மாயமான இந்தோனேஷிய விமானம் என்ன ஆனது? வெளியான பரபரப்பு தகவல்!!!

இந்தோனேஷியா தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து புறப்பட்ட பயணிகள் விமானம் நேற்று திடீரென மாயமானது.

'அப்பதான் தப்பு பண்றவங்களுக்கு பயம் வரும்': அருண்விஜய்யின் 'சினம்' டீசர்

அருண் விஜய் நடிப்பில் ஜிஎன் குமரவேலன் இயக்கிய 'சினம்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது 

கோவை வந்த சமந்தா யாரை சந்தித்தார் தெரியுமா? வைரலாகும் புகைப்படம்!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா கோவை வந்து அங்கிருந்து ஈஷா யோகா மையத்திற்கு சென்று சத்குருவை சந்தித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது