இது எந்திரன் டைப் படமல்ல: ரஜினி படம் குறித்து கார்த்திக் சுப்புராஜ் கூறிய புதிய தகவல்

  • IndiaGlitz, [Saturday,February 24 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படத்தை இளம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார் என்றவுடன் கோலிவுட்டில் பலர் ஆச்சரியப்பட்டனர். ரஜினியின் கால்ஷீட்டுக்காக வருடக்கணக்கில் காத்திருக்கும் இயக்குனர்கள் மத்தியில் ஒருசில படங்களே இயக்கிய இளம் இயக்குனர் ஒருவருக்கு ரஜினி மீண்டும் வாய்ப்பு கொடுத்துள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த நிலையில் தனக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகளே இல்லை என்று ஏற்கனவே கூறிய கார்த்திக் சுப்புராஜ், இந்த படம் குறித்து மேலும் சில தகவல்களை கூறியுள்ளார்.

ரஜினி நடிக்கும் இந்த படம் எந்திரன் டைப் படம் அல்ல. அதேபோல் பிரமாண்டமான படமும் அல்ல. ஆனால் கதையிலும் திரைக்கதையிலும் நிச்சயம் பிரமாண்டம் இருக்கும். மேலும் ஒரு ரஜினி படத்தில் இருக்க வேண்டிய அனைத்து அம்சங்களும் இருக்கும் என்று கூறினார்.

மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் இரண்டு மாதங்களில் தொடங்கவுள்ளதாகவும், இந்த வருட இறுதியில் படப்பிடிப்பை முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

More News

'காலா' படம் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தனுஷ்

ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் ரஞ்சித் இயக்கியுள்ள 'காலா' திரைப்படம் வரும் ஏப்ரல் 27ஆம் தேதி வெளியாகும் என்று தயாரிப்பாளர் தனுஷ் கடந்த சில வாரங்களுக்கு முன் தனது டுவிட்டரில் பதிவு செய்தார்

த்ரிஷாவிடம் குத்து வாங்கிய அதிர்ஷ்டகாரர்

கடந்த 15 ஆண்டுகளாக தமிழ் திரையுலகில் கதாநாயகியாக நடித்து வரும் நடிகை த்ரிஷா. இவருடன் நடித்த நடிகைகள் பலர் அக்கா, அம்மா வேடங்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து கொண்டிருக்கும் நிலையில்

ஜாக்குலினை அடுத்து சினிமாவில் அறிமுகமாகும் ரக்சன்

கலக்க போவது யாரு நிகழ்ச்சியின் தொகுப்பாளர்களான ஜாக்குலின், ரக்சன் ஏற்கனவே பிரபலம் அடைந்த நிலையில், ஜாக்குலின், நயன்தாராவின் 'கோலமாவு கோகிலா' படத்தில் அவருக்கு சகோதரியாக நடித்துவருகிறார்

ரஜினி படம் குறித்து கார்த்திக் சுப்புராஜ் கூறிய லேட்டஸ்ட் தகவல்

ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக புதிய படத்தை தயாரிக்கவுள்ளது என்று நேற்று வெளியான செய்தி ரஜினி ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி

மோடி மோசடியால் விராத் கோஹ்லி பதவிக்கு ஆபத்தா?

பிரபல வைர வியாபாரி நீரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.11500 கோடி கடன் பெற்று வெளிநாட்டுக்கு தப்பியோடிய நிலையில் அந்த வங்கியின் நிலை ஆட்டம் கண்டுள்ளது