என் பின்னால் இருப்பது ஒரே ஒருவர் தான்: சென்னை திரும்பிய ரஜினி

  • IndiaGlitz, [Tuesday,March 20 2018]

ரஜினி குறித்து பெரும்பாலானோர் செய்து வரும் விமர்சனம் அவரது பின்னால் பாஜக இருக்கின்றது என்பதும், பாஜக அவரை ஆட்டுவிக்கின்றது என்பதும்தான். இன்று இமயமலையில் இருந்து சென்னை திரும்பிய ரஜினிகாந்த் இதற்கு பதிலளித்தார். என் பின்னால் பாஜக இருப்பதாக பலர் கூறி வருகின்றனர். என் பின்னால் இருப்பது கடவுள் ஒருவர்தான். அதன் பின்னர் மக்கள் என்று கூறினார்

மேலும் நான் இன்னும் அரசியலில் குதிக்கவில்லை. முழு நேர அரசியலில் குதிக்கும் வரை அன்றாடம் நடக்கும் விஷயங்கள் குறித்த கேள்விகளுக்கு நான் பதில் அளிக்க மாட்டேன் என்று ஏற்கனவே கூறிவிட்டேன். இன்னும் எத்தனை தடவை இதை நான் கூற வேண்டும் என்று தெரியவில்லை' என்று கூறினார்.

மேலும் காவிரி மேலாண்மை வாரியம் குறித்து கருத்து கூறிய ரஜினிகாந்த், 'காலம் தாழ்த்தாமல் காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும்' என்று கூறினார்.

மேலும் ஆலங்குடியில் பெரியார் சிலை உடைக்கப்பட்டது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றும் ரத யாத்திரையால் மத பிரச்சனை ஏற்படாமல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று கூறினார்

More News

யாருக்கோ சாமரம் வீசுகிறது தமிழக அரசு: கமல்ஹாசன்

உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து கிளம்பிய ராமராஜ்ய ரதயாத்திரை, அதன்பின்னர் மகாராஷ்டிரா, கர்நாடகம், கேரளம் உள்பட ஐந்து மாநிலங்கள் வழியாக எந்தவித பிரச்சனையும் இல்லாமல் பயணம் செய்தது.

விஜய் படத்திற்கு மட்டும் சிறப்பு அனுமதியா? பிரபல தயாரிப்பாளர் கேள்வி

தயாரிப்பாளர் சங்கத்தின் முடிவின்படி மார்ச் 1ஆம் தேதியில் இருந்து புதிய படங்கள் வெளியீடு இல்லை என்றும், மார்ச் 16ஆம் தேதியில் இருந்து படப்பிடிப்புகள் நிறுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது

சூப்பர் ஸ்டாரின் தங்கை கேரக்டரில் மியாஜார்ஜ்

இயக்குனர் ரவிகுமார் இயக்கத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான 'இன்று நேற்று நாளை' படத்தின் மூலம் அறிமுகமாகிய நடிகை மியா ஜார்ஜ்

சசிகலாவுக்கு 15 நாட்கள் பரோல்: கணவர் இறுதி சடங்கில் கலந்து கொள்கிறார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று பெங்களூர் பார்ப்பன அக்ராஹர சிறையில் இருக்கும் சசிகலா, தனது கணவர் நடராஜன் இன்று காலை உடல்நலக்கோளாறால்

தானியங்கி கார் மோதி பெண் பலி

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இந்தியா உள்பட உலகின் பல நாடுகளில் இயங்கி வரும் தனியார் கார் புக்கிங் நிறுவனம் ஒன்று சமீபத்தில் தானியங்கி கார்களை அறிமுகம் செய்தது