இந்த படத்தில் ரஜினிகாந்த் நடித்தால் விருதுகள் உறுதி: வைரமுத்து

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இந்த கதையில் நடித்தால் அவருக்கு விருதுகள் உறுதி என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

கவிஞர் வைரமுத்து எழுதிய ’கள்ளிக்காட்டு இதிகாசம்’ என்ற புத்தகம் மிகப்பெரிய அளவில் புகழ் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. வைகை அணை கட்டப்பட்ட போது அங்கு நீர் தேங்கும் பரப்புகளில் இருந்த 14 கிராமங்கள் காலி செய்யப்பட்டன. அந்த மண் சார்ந்த மக்கள் மண்ணோடும் வாழ்வோடும் நடத்திய போராட்டங்கள் தான் இந்த கதையின் கரு என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த புத்தகம் ஒரு லட்சம் பிரதிகளுக்கும் விற்பனையாகி உள்ளது என்பதும் தமிழில் உருவான இந்த புத்தகம் ஏராளமான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்பது குறிபிடத்தக்கது. அதுமட்டுமன்றி 2003 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதும் இந்த புத்தகத்திற்காக வைரமுத்து பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’கள்ளிக்காட்டு இதிகாசம்’ திரைப்படமாக எடுக்கப்பட்டால் அதிலுள்ள ’பேயத்தேவர்’ என்ற கேரக்டருக்குத ரஜினிகாந்த் பொருத்தமாக இருப்பார் என்றும் அவர் நடித்தால் சிறப்பாக இருக்கும் என்றும் கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். இந்த கதையில் ரஜினிகாந்த் நடித்தால் அவருக்கு எதிர்பார்த்த ஊதியம் கிடைக்கவில்லை என்றாலும் எதிர்பாராத விருதுகள் நிச்சயம் கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.