அமித்ஷாவுக்கு ரஜினி வாழ்த்து: காஷ்மீர் விவகாரத்திற்கு பாராட்டு!

  • IndiaGlitz, [Sunday,August 11 2019]

துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு எழுதிய புத்தகம் ஒன்றின் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள இன்று சென்னை வந்த பாஜக தேசிய தலைவர் மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு தமிழக பாஜக தலைவர்கள் சிறப்பான வரவேற்பை அளித்தனர்.

இந்த நிலையில் இந்த புத்தக வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் இந்த நிகழ்ச்சியில் பேசியபோது, 'ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தை அமித்ஷா திறம்பட கையாண்டது பாராட்டுக்குறியது என்றும், நாடாளுமன்றத்தில் நீங்கள் ஆற்றிய உரை சிறப்பாக இருந்தது என்றும் பாராடினார். மேலும் அமித்ஷாவும் மோடியும் கிருஷ்ணன் - அர்ஜீனன் போன்றவர்கள் என்றும் அவர் புகழாரம் சூட்டினார்.

மேலும் வெங்கையா நாயுடு மிகச்சிறந்த ஆன்மீகவாதி என்றும், அவர் தப்பித்தவறி அரசியல்வாதி ஆகிவிட்டார் என்றும் ரஜினிகாந்த் பேசினார். இந்த விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்களும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.