வில்லன் யார்? 'ராட்சசன்' விஷ்ணுவிடம் ரஜினி கேட்ட கேள்வி

  • IndiaGlitz, [Tuesday,October 23 2018]

விஷ்ணுவிஷால், அமலாபால் நடிப்பில் இயக்குனர் ராம்குமார் இயக்கிய 'ராட்சசன்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆகியது. தமிழில் ஒரு நல்ல சஸ்பென்ஸ் த்ரில் படம் வெளிவந்து நீண்ட வருடங்கள் ஆகிவிட்டதால் இந்த படம் அனைத்து தரப்பினர்களையும் கவர்ந்தது.

இந்த நிலையில் இந்த படத்திற்கு ஏற்கனவே கோலிவுட் திரையுலகினர்களிடம் இருந்து பாராட்டுக்கள் குவிந்த நிலையில் தற்போது சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடிகர் விஷ்ணுவை தொலைபேசி மூலம் பாராட்டியது குறித்த தகவல் வெளிவந்துள்ளது.

'பெண்டாஸ்டிக், பெண்டாஸ்டிக், பெண்டாஸ்டிக், நடிப்பு தூள் கிளப்பிட்டிங்க, போலீஸ் யூனிபார்ல செம்ம ஃபிட் என்று ரஜினி கூறியதாகவும், மேலும் 'வில்லன் யாரு? சூப்பர் பாடி லேங்க்வேஜ் என்று வில்லன் நடிப்பை பாராட்டியதாகவும், டைரக்டர் உங்க குழு சூப்பர் என்று கூறியதாகவும் விஷ்ணு தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

வளர்ந்து வரும் திறமைமிக இளைஞர்களை ரஜினிகாந்த் தொடர்ந்து பாராட்டி வரும் நிலையில் 'ராட்சசன்' படத்திற்கு அவரிடம் இருந்து கிடைத்த பாராட்டால் படக்குழுவினர் இன்ப அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர்.

More News

குற்றாலத்தை அடுத்து தாய்லாந்துக்கு பறந்த விஜய்சேதுபதி-அஞ்சலி

விஜய்சேதுபதி நடித்த 'பண்ணையாரும் பத்மினியும் மற்றும் 'சேதுபதி' ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் அருண்குமார் இயக்கும் அடுத்த படத்திலும் விஜய் சேதுபதி நடித்து வருகிறார்.

பாடகி வைக்கம் விஜயலட்சுமி திருமணம்: மிமிக்ரி கலைஞரை மணந்தார்

'தெறி', 'அறம்' உள்பட பல படங்களில் பாடல்கள் பாடிய பிரபல பாடகி வைக்கம் விஜயலட்சுமி திருமணம் நேற்று நடைபெற்றது.

யோகிபாபு நடிக்கும் 'கூர்கா' படத்தில் கனடா நடிகை

கோலிவுட் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராகிய யோகிபாபு, விஜய்யின் 'சர்கார்' மற்றும் அஜித்தின் 'விஸ்வாசம்' படங்கள் உள்பட பல படங்களில் நடித்து வருகிறார்.

சீதக்காதியின் ரிலீஸ் உரிமையை பெற்ற பிரபல நிறுவனம்

கோலிவுட்டில் கிட்டத்தட்ட மாதம் ஒரு திரைப்படம் என்ற கணக்கில் ரிலீஸ் செய்து வரும் விஜய்சேதுபதியின் அடுத்த படமான 'சீதக்காதி' அடுத்த மாதம் ரிலீஸாகவுள்ளது.

மீடூ பிரச்சனை குறித்து ஏ.ஆர்.ரஹ்மான்

சின்மயி ஆரம்பித்து வைத்த மீடூ பிரச்சனை தற்போது கோலிவுட் திரையுலகில் பெரும் புயலை கிளப்பிய நிலையில் முதல்முறையாக சின்மயி புகழுக்கு முக்கிய காரணமாக இருந்தவர்களில் ஒருவரான