பகலில் ஆசிரியர், இரவில் டான்: ரஜினிக்கு மீண்டும் ஒரு 'நான் சிகப்பு மனிதன்?

  • IndiaGlitz, [Thursday,July 19 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வரும் திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்து தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பும் தொடங்கிவிட்டது. இந்த நிலையில் வரும் ஆகஸ்ட் மாதம் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தில் ரஜினியின் கேரக்டர் குறித்த சில தகவல்கள் கசிந்துள்ளது. ரஜினி இந்த படத்தில் கல்லூரி பேராசிரியராக நடித்து வருவதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது தெரிந்ததே. இந்த நிலையில் பகலில் பேராசிரியராக வரும் ரஜினி, இரவில் டான் ஆக இருப்பது போன்றும், கல்லூரிக்கு இடைஞ்சல் செய்யும் சமூக விரோதிகளை இரவில் அவர் பழிவாங்குவதுதான் கதை என்று கூறப்படுகிறது. இதேபோன்றுதான் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான 'நான் சிகப்பு மனிதன்' படத்தில் ரஜினி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

அதேபோல் ரஜினிக்கு இந்த படத்தில் மாஸ் ஓப்பனிங் காட்சியும், ஒப்பனிங் பாடலும் உண்டு என்ற தகவல் ரஜினி ரசிகர்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. 'கபாலி' மற்றும் 'காலா' படங்களில் இவை இரண்டும் மிஸ்ஸிங் என்பது ரசிகர்களுக்கு ஒரு பெரிய ஏமாற்றமாக இருந்தது.

மேலும் ரஜினியின் காதலியாக பிளாஷ்பேக் காட்சிகளில் மட்டுமே சிம்ரன் தோன்றுவதாகவும், விஜய்சேதுபதியின் வில்லன் கேரக்டர் ரஜினியின் கேரக்டருக்கு ஈடுகொடுக்கும் வகையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

More News

கொடூரமாக கொலை செய்தால்கூட பத்தாது: சிறுமியை சீரழித்தவர்கள் குறித்து விஜய்சேதுபதி

சென்னையில் உள்ள அபார்ட்மெண்ட் ஒன்றில் 11 வயது சிறுமியை 22 பேர் கொடூரமாக பல மாதங்கள் பாலியல் வன்புணர்வு செய்துள்ள கொடுமையை கண்டு தமிழகமே கொதித்து எழுந்துள்ளது

ஸ்ரீரெட்டியின் குற்றச்சாட்டுக்குக் கார்த்தி அதிரடி பதில்

நடிகர் கார்த்தி நடிப்பில் பாண்டிராஜ் இயக்கிய 'கடைக்குட்டி சிங்கம்' திரைப்படம் தமிழகம் முழுவதும் பெரும் வெற்றி பெற்றுள்ள நிலையில் இந்த படத்தின் வெற்றிக்கு நன்றி சொல்ல கார்த்தி

ரஜினிகாந்த்-கார்த்திக் சுப்புராஜ் படத்தில் இணைந்த மேலும் ஒரு பிரபலம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வரும் திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்து இன்று முதல் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.

பிரபுதேவாவின் முதல் போலீஸ் பட டைட்டிலில் போலீஸ் அதிகாரி

பிரபுதேவா முதன்முதலாக போலீஸ் கேரக்டரில் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு இன்னும் டைட்டில் அறிவிக்கப்படாமலேயே நடந்து வந்தது.

பெரிய நடிகர்கள் நடிக்க வேண்டிய படத்தில் நான்: விஜய்சேதுபதி

நடிகர் விஜய்சேதுபதியின் நடிப்பும், அவர் ஏற்று நடிக்கும் கேரக்டரும் படிப்படியாக ஆச்சரியப்படுத்தி வரும் நிலையில் அவரது 25வது படமான 'சீதக்காதி'