'அண்ணா நோ கமெண்ட்ஸ்'..  பத்திரிகையாளர் கேள்விக்கு ரஜினிகாந்த் கூறிய பதில்..!

  • IndiaGlitz, [Wednesday,May 29 2024]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று ஆன்மீக பயணம் மேற்கொள்வதை அடுத்து பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் அரசியல் குறித்த கேள்விக்கு ’அண்ணா நோ கமெண்ட்ஸ்’ என்று பதில் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று இமயமலை செல்வதற்காக புறப்பட்ட நிலையில் அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது இமயமலை ஆன்மீக பயணம் குறித்த கேள்வி கேட்டபோது அதற்கு பதில் அளித்த ரஜினிகாந்த் ’ஒவ்வொரு ஆண்டும் நான் இமயமலை செல்கிறேன் என்றும் , இந்த ஆண்டும் கேதார்நாத், பத்ரிநாத் மற்றும் பாபா குகைக்கு செல்கிறேன்’ என்றும் தெரிவித்தார்.

அதன்பின், ‘பிரதமர் மோடி மீண்டும் வெற்றி பெறுவார் என்று நினைக்கிறீர்களா? என்ற கேள்விக்கு ‘சாரி, அரசியல் கேள்விகள் கேட்க வேண்டாம்’ என்று பதில் அளித்தார். அதேபோல் ’இசை பெரிதா பாடல் பெரிதா என்ற சர்ச்சை குறித்து உங்கள் கருத்து என்ன? என்று கேட்டபோது ’அண்ணா நோ கமெண்ட்ஸ்’ என்று அந்த கேள்வி கேட்ட பத்திரிகையாளருக்கு பதில் அளித்தார். ரஜினிகாந்தின் இந்த பேட்டியின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஓய்வு எடுப்பதற்காக அபுதாபி சென்ற ரஜினிகாந்த் அங்கு பிரதமர் மோடி திறந்து வைத்த இந்து கோவிலுக்கு சென்றார் என்பதும் அது குறித்த புகைப்படங்கள் வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகியது என்பது தெரிந்தது. இந்த நிலையில் தற்போது அவர் ஆன்மீக சுற்றுப்பயணத்திற்கு இமயமலை செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இமயமலையில் இருந்து ரஜினிகாந்த் சென்னை திரும்பியதும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் அனிருத் இசையில் உருவாகும் ’கூலி’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.