ஒரே படத்தில் ரஜினியும் என்.டி.ஆர் பாலகிருஷ்ணாவும் நடிக்கிறார்களா? டபுள் மாஸ் படமா?

  • IndiaGlitz, [Tuesday,June 04 2024]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் என்டிஆர் பாலகிருஷ்ணா இருவரும் தனித்தனியாக நடித்தாலே அந்த படங்கள் மாஸ் படங்களாக இருக்கும் என்ற நிலையில் தற்போது ஒரு படத்தில் இருவரும் சேர்ந்து நடிக்க இருப்பதாக கூறப்படுவதை அடுத்து அந்த படம் டபுள் மாஸ் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள ’வேட்டையன்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் அடுத்ததாக அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் ’கூலி’ என்ற படத்தில் நடிக்க உள்ளார். தற்போது அவர் இமயமலையில் ஆன்மீக சுற்றுப்பயணத்தில் இருக்கும் நிலையில் அவர் சென்னை திரும்பியதும் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ’கூலி’ படத்தை முடித்தவுடன் அவர் நெல்சன் இயக்கத்தில் உருவாகும் ’ஜெயிலர் 2’ படத்தில் நடிப்பார் என்றும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகளை கூட நெல்சன் தொடங்கி விட்டதாகவும் கூறப்பட்டது. மேலும் இந்த திரைப்படத்திற்கு ’ஜெயிலர்’ முதல் பாகத்தில் இடம்பெற்ற பாடலான ‘ஹூக்கும்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் இந்த படத்தில் என்டிஆர் பாலகிருஷ்ணா ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்தால் ரஜினிகாந்த் மற்றும் என்டிஆர் பாலகிருஷ்ணா ஆகிய இருவரும் ஒரே படத்தில் நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது மட்டும் உண்மையானால் படம் டபுள் மாஸ் படமாக தெறிக்கவிடும் என்பதில் சந்தேகமில்லை.