தமிழக முதல்வர் உறவினர் மறைவு.. ரஜினிகாந்த், கமல்ஹாசன் இரங்கல்..!

  • IndiaGlitz, [Thursday,October 10 2024]

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உறவினர் மறைவை அடுத்து கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஆகிய இருவரும் தங்கள் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சகோதரி செல்வி என்பவரின் கணவர் முரசொலிசெல்வம், பெங்களூரில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். இவர் கடந்த சில நாட்களாக உடல் நல குறைவு காரணமாக பெங்களூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் இன்று அவர் காலமான நிலையில் அவருடைய மறைவிற்கு முதலமைச்சர் உள்பட பலரும் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஆகிய இருவரும் தங்கள் சமூக வலைதளங்களில் கூறியிருப்பதாவது:

கமல்ஹாசன்:

என்னுடைய இனிய நண்பர் திரு. முரசொலி செல்வம் மறைந்த செய்தி பெரும் துயரத்தை அளிக்கிறது. பத்திரிகை ஆசிரியராக அரை நூற்றாண்டுக் காலத்திற்கும் மேலாக திராவிடக் கருத்தியலைச் சுமந்தவர். திரைப்படத் துறையிலும் பங்களிப்பாற்றியவர். எல்லாவற்றுக்கும் மேலாக நட்புக்கு மரியாதை அளிக்கிற நல்ல மனிதர். திரு. முரசொலி செல்வம் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் என்னுடைய இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ரஜினிகாந்த்:

திரு முரசொலி செல்வம் அவர்கள் என்னுடைய நீண்ட கால நண்பர். அருமையான மனிதர். அவருடைய மறைவு எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது. அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும். அவருடைய குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்.

More News

'விடுதலை 2' படத்தின் முக்கிய பணி இன்று தொடக்கம்.. ரெட் ஜெயண்ட் மூவீஸ் அறிவிப்பு..!

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடித்த 'விடுதலை' திரைப்படம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இந்த படத்தின் இரண்டாம்

சமந்தாவின் 'சிட்டாடல்' ரிலீஸ் தேதி அறிவிப்பு.. ரசிகர்கள் குஷி..!

நடிகை சமந்தா பாலிவுட்டில் "சிட்டாடல்" என்ற தொடரில் நடித்து வந்த நிலையில், அந்த தொடர் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகும் தேதி குறித்து அறிவிப்பு வெளியானது.

நடிகையை கர்ப்பமாக்கி சீரழித்த இயக்குனர்.. பூனம் கவுர் கூறிய அதிர்ச்சி தகவல்..!

பிரபல இயக்குனர் ஒருவர் நடிகையை கர்ப்பமாக்கி சீரழித்தார் என்று நடிகை பூனம் கவுர் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கழுதை.. களத்தில் இறங்கிய பீட்டா அமைப்பு..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கழுதை பயன்படுத்தப்பட்ட நிலையில் பீட்டா அமைப்பு உடனடியாக களத்தில் இறங்கி, கழுதையை விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

சண்டை போட்டா தான் மக்கள் லவ் பண்ணுவாங்களா? ஜாக்குலின் குறித்து அன்ஷிதா

விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி நான்கு நாட்கள் மட்டுமே ஆகியுள்ள நிலையில், இப்போதே நிகழ்ச்சி விறுவிறுப்பான கட்டத்தை எட்டிவிட்டது என்பதும் 24 மணி நேரத்தில்