close
Choose your channels

ரஜினிகாந்த் - துரைமுருகன் சர்ச்சை பேச்சு.. மீண்டும் இருவரும் கூறிய கருத்துக்கள்..!

Monday, August 26, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சமீபத்தில் முதலமைச்சர் தலைமையில் நடந்த புத்தக விழாவில் கலந்து கொண்ட போது மூத்த அமைச்சர் துரைமுருகன் குறித்து பேசியபோது, அவர் கலைஞர் கண்ணிலேயே விரல்விட்டு ஆட்டியவர், பழைய ஸ்டுடண்ட்களை சமாளிப்பது ரொம்ப கஷ்டம், முதலமைச்சர் அவரை சரியாக சமாளிக்கிறார் என்று கூறியிருந்தார்.

ரஜினியின் இந்த பேச்சுக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் துரைமுருகன் ’மூத்த நடிகர்கள், பல் போன நடிகர்கள், வயதாகிய பின்னரும் இன்னும் நடிப்பதால் தால் இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்று கூறியது ரஜினிகாந்த் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இது குறித்து சமூக வலைதளங்களில் பரபரப்பு கமெண்ட்கள் வெளியாகிக் கொண்டிருந்த நிலையில் இன்று ரஜினிகாந்த் துரைமுருகனின் பேச்சு விளக்கம் அளித்தார். அவர் இது குறித்து கூறிய போது ’மதிப்புக்குரிய அமைச்சர் துரைமுருகன் அவர்கள் எனது நீண்ட கால நண்பர், அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும், அவர் என்ன சொன்னாலும் எனக்கு வருத்தம் கிடையாது, எங்கள் நட்பு எப்போதும் தொடரும்’ என்று கூறியுள்ளார்.

அதேபோல் துரைமுருகனிடம் ரஜினிகாந்த் கூறியது குறித்த கருத்து கேட்டபோது ’அதேதான் நானும் சொல்கிறேன், எங்களுடைய நகைச்சுவையை யாரும் பகைச்சுவையாய் பயன்படுத்த வேண்டாம், நாங்கள் எப்போதும் போல் நண்பர்களாகவே இருப்போம்’ என்று கூறியுள்ளார்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment