டெல்லி கிரிக்கெட் மைதானத்தில் ரஜினி-ஷங்கர்

  • IndiaGlitz, [Sunday,March 06 2016]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கி வரும் '2.0' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள தனியார் தீம் பார்க் ஒன்றில் நடைபெற்று வருவதாகவும், இந்த படப்பிடிப்பில் மிலிட்டரி டேங்குகளை பயன்படுத்தி ஷங்கர் படப்பிடிப்பு நடைபெறுவதாகவும் வந்த செய்தியினை ஏற்கனவே பார்த்தோம்.

இந்நிலையில் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு டெல்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளதாகவும், இங்கு பிரமாண்டமான ரோபோவின் சண்டைக்காட்சி நடைபெறவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்த படப்பிடிப்பிற்காக ரஜினி, ஷங்கர், VFX டீம் உள்பட விரைவில் டெல்லி செல்லவுள்ளதாகவும், மார்ச் மாதம் முழுவதும் டெல்லி கிரிக்கெட் மைதானத்தில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ரஜினிகாந்த், அக்சயகுமார், எமிஜாக்சன் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை பெரும் பொருட்செலவில் லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகும் இந்த படம் இந்திய திரையுலகின் மிக அதிக பட்ஜெட் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'வசூல் ராஜாவ்'வுக்கு பின் இணையும் கமல்-பிரபு

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும், ராம்குமாரின் மகனுமான துஷ்யந்த் ஏற்கனவே ஒரிரு படங்களில் கதாநாயகனாக நடித்துள்ள நிலையில் தற்போது புதிய தயாரிப்பு நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து அதன் மூலம் 'மீன்குழம்பும் மண்பானையும்' என்ற படத்தை தயாரித்து வருகிறார்....

சவுகார்பேட்டை திரைவிமர்சனம் - சரிந்த கோட்டை

பேய்ப்பட சீசனில் ஆரம்பித்து பேய்ப்பட சீசன் முடிந்த பிறகு வந்திருக்கும் பேய்ப்படம். ஸ்ரீகாந்த் கடந்த சில வருடங்களாக ஒரே ஒரு வெற்றிப்படத்திற்கு காத்திருந்த நிலையில் இந்த சவுகார்பேட்டை'....

ஆதரவு இன்றி தவித்த 'ஆண்பாவம்' நடிகைக்கு விஷால் செய்த உதவி

விக்ரம் நடித்த 'தூள்' படத்தில் நடித்த நடிகை பரவை முனியம்மா சமீபத்தில் உடல்நலமின்றி மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது நடிகர் சங்கம்...

'ரெமோ'ன்னும் ஏன் பேர் வச்சாங்க தெரியுமா?

சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் படத்திற்கு 'ரெமோ' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என்பதை அனைவரும் அறிவோம்...

கபாலி'யில் உள்ள 10 முக்கிய அம்சங்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கி முடித்துள்ள 'கபாலி' திரைப்படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது...