'2.0' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு நடைபெறும் இடம்

  • IndiaGlitz, [Saturday,March 19 2016]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கி வரும் '2.0 படத்தின் படப்பிடிப்பு தற்போது டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இங்கு கால்பந்து போட்டி நடைபெறுவது போன்ற காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
இந்நிலையில் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு மொராக்கோ நாட்டில் நடைபெறவுள்ளதாம். மொராக்கா நாட்டின் இயற்கை எழில் கொஞ்சும் பகுதியில் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு நடைபெற ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னர் மொராக்கோ நாட்டில் ஜீவா நடித்த 'யான்' படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
ரஜினிகாந்த், அக்சயகுமார், எமிஜாக்சன் உள்ளிட்ட பலர் நடித்த '2.0' படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கின்றார். இந்தியாவின் மிகப்பெரிய பட்ஜெட் படமாக உருவாகி வரும் இந்த படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.