close
Choose your channels

ரஜினி, கமல் இருவரில் ஆட்சியை பிடிப்பது யார்? குருமூர்த்தி கருத்து

Wednesday, May 9, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட் திரையுலகின் இரண்டு ஜாம்பவான்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகிய இருவரும் வரும் தேர்தலில் களத்தில் குதிக்கவுள்ளனர். கமல்ஹாசன், அரசியல் கட்சியை ஆரம்பித்து தனது அரசியல் ஆட்டத்தை ஆரம்பித்துவிட்டார். ரஜினியின் அரசியல் அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளியாக வாய்ப்பு உள்ளது. இந்த இருவரின் கட்சிகளுக்கும் பொதுமக்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் ரஜினி, கமல் இருவரில் ரஜினிதான் ஆட்சியை பிடிப்பார் என்றும், தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை ரஜினியால் மட்டுமே நிரப்ப முடியும் என்றும் துக்ளக் ஆசிரியரும், பாஜக ஆதரவாளருமான குருமூர்த்தி இன்று பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். மேலும் ரஜினி, கமல் இருவரிடத்திலும் நான் அரசியல் பேசினாலும் அவர்களுக்கு நான் அரசியல் ஆலோசகர் இல்லை என்றும் குருமூர்த்தி தெரிவித்தார்.

மேலும் தமிழகத்தில் தேர்தலில் போட்டியிட எந்த எம்.எல்.ஏ-வுக்கும் தைரியமில்லை என்பதால் தற்போதைய ஆட்சி இன்னும் 3 ஆண்டுகளுக்கு நீடிக்கும் என்றும் அவர் கருத்து கூறியுள்ளார். 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment