தீவிர ரசிகரை கட்டியணைத்து பாராட்டிய ரஜினிகாந்த்: வைரலாகும் புகைப்படம்

  • IndiaGlitz, [Monday,March 02 2020]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஓய்வாக இருக்கும்போது அவ்வபோது தனது ரசிகர்களை சந்தித்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் தற்போது ‘அண்ணாத்த’ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ஓய்வில் இருக்கும் ரஜினிகாந்த் தனது தீவிர ரசிகர் ஒருவரை குடும்பத்துடன் தனது வீட்டிற்கு வரவழைத்து அவருடன் சில நிமிடங்கள் பேசினார்.

ரஜினியின் தீவிர ரசிகரான மதுரை எல்லீஸ் நகரை சேர்ந்த சுந்தர் ஒரு சிறந்த ஓவியர். கடந்த பல ஆண்டுகளாக, தனது வீட்டையே ரஜினியின் ஓவியத்தால் அலங்காரம் செய்துதுள்ளார் என்பதும் இந்த ஓவியங்கள் ரஜினி பிறந்தநாளான கடந்த டிசம்பர் 12 ஆம் தேதி சமூகவலைதளங்களில் வைரலானது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த ஓவியங்களை பார்த்து அதிசயித்த ரஜினிகாந்த் சுந்தரை நேற்று (மார்ச் 1) நேரில் அழைத்து தனது பாராட்டை தெரிவித்தார். மேலும் தனது மனைவி, மகளுடன் வந்த சுந்தர், ரஜினியை சந்தித்து தான் வரைந்த ரஜினி ஓவியத்தை பரிசாக வழங்கி புகைப்படம் எடுத்துக்கொண்டார். மேலும் ஓவியம் வரைந்த சுந்தரை கட்டியணைத்து ரஜினிகாந்த் பாராட்டியது குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

More News

ஜோதிகாவின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

திருமணத்திற்குப் பின்னர் நீண்ட இடைவேளைக்குப் பின்னர் கடந்த 2015 ஆம் ஆண்டு '36 வயதினிலே' என்ற படத்தின் மூலம் மீண்டும் ரீ எண்ட்ரி ஆன நடிகை ஜோதிகா,

பன்றிக்காய்ச்சல் ஒரு நோயே இல்லை.. கொரோனோவுக்கு 'யோகா' இருக்கிறது.. கலக்கும் யோகி ஆதித்யத்நாத்..!

எதனால் ஏற்படுகிறது என்பதன் அடிப்படையில் அதை பன்றிக்காய்ச்சல் அல்லது பறவைக் காய்ச்சல் என்று அழைக்கிறோம்.எனவே, யாரும் பன்றிக்காய்ச்சலை நினைத்து பீதியடைய வேண்டாம்.

குரங்கு ஒன்று ஆமைக்கு ஆப்பிள் ஊட்டி விடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது..!

தங்களுக்குள் சம்பந்தமே இல்லாத விலங்குகள் ஒன்றுக்கொன்று அன்பாகாவும் ஆறுதலாகவும் இருப்பது எப்போதுமே பெரிய விஷயமாக மக்களால் பார்க்கப்படுகிறது.

அவங்க வேலையே குலைக்கிறதுதான்: வரலட்சுமி ஆவேசம்

பிரபல நடிகை வரலட்சுமி அவர்கள் நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் பல்வேறு கேள்விகளுக்கு போல்டாக பதிலளித்தார்.

நிர்பயா வழக்கு குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை எப்போது??? தொடரும் இழுபறி...

கடந்த 2012 இல் ஓடும் பேருந்தில் பாலியல் வன்கொடுமை செய்யப் பட்டு கொல்லப் பட்ட மருத்துவ