சூப்பர் ஸ்டார் ரஜினியின் அடுத்த பட டீஸர்: இணையத்தில் வைரல் 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் ’அண்ணாத்த’ என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அவர் பேரி கிரில்ஸ் இயக்கத்தில் ’மேன் வெர்சஸ் வைல்ட்’ என்ற ஆவணப் படத்தில் நடித்தார்.

கர்நாடக மாநிலத்தில் உள்ள அடர்ந்த காட்டுப் பகுதியில் படமாக்கப்பட்ட இந்த ஆவணப்படம் வரும் 23ஆம் தேதி இரவு 8 மணிக்கு டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் டீஸர் தற்போது வெளிவந்து இணையத்தில் வைரலாகியுள்ளது ஒரு நிமிடம் ஓடும் இந்த டீஸரில் ரஜினிகாந்தின் பல சாகச காட்சிகள் உள்ளன. குறிப்பாக வாகனம் ஓட்டுவது, தண்ணீரில் மூழ்கி செல்வது, மலை ஏறுவது, புலிகள் மற்றும் காட்டு விலங்குகளுடன் நடமாடுவது ஆகிய த்ரில் காட்சிகள் உள்ளன.

இந்த ஆவணப்படத்தின் டீசரிலேயே த்ரில் காட்சிகள் இருக்கும் நிலையில் முழு ஆவணப்படமும் எவ்வாறு இருக்கும் என்பதை அறிய ரஜினி ரசிகர்கள் உட்பட அனைவரும் மிகுந்த ஆவலுடன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சூப்பர் ஸ்டாருக்காக ஒரே ஒரு பாட்டுக்கு நடனம் ஆடும் ரெஜினா.

தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்பட சுமார் 30 படங்களுக்கு மேல் நடித்தவர் நடிகை ரெஜினா. இவர் தற்போது 'கள்ளபார்ட்', 'கசடதபற' ஆகிய படங்களில் நாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார்

மகளிர் தினத்தைச் சிறப்பித்த ஆப்பிள், கூகுள் நிறுவனங்கள்

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 ஆம் தேதி சர்வதேச மகளிர் தினம் உலகம் முழுவதும் பல நாடுகளால் சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது

கேரளாவில் 3 வயது குழந்தைக்கு கொரோனா வைரஸ்..!

விமான நிலையத்தில் மருத்துவ பரிசோதனைக்கு ஒத்துழைக்காமல் இருந்ததால் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே சீனாவிலிருந்து கொரோனா பாதிக்கப்பட்டு வந்த 3 பேர் குணப்படுத்தப்பட்டு வீடு திரும்பியுள்ளனர்.

பிரபல தயாரிப்பாளரை வஞ்சப்புகழ்ச்சி செய்த இயக்குனர் நவீன்!

தமிழ் திரையுலகின் பிரபல தயாரிப்பாளர்களில் ஒருவர் ஜே சதீஷ்குமார். ஜேஎஸ்கே பிலிம் கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்தின் சார்பில் இவர் சுமார் 20 திரைப்படங்களை தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 

மலேசியாவில் இருந்து கோவை வந்த நபருக்கு கொரோனா? அதிர்ச்சி தகவல்

சீனாவின் வூகான் என்ற பகுதியில் இருந்து ஆரம்பித்த கொரானா வைரஸ் படிப்படியாக சீனா முழுவதும் பரவி, சுமார் 2 ஆயிரம் உயிர்களை பலி வாங்கி விட்டது.