தர்பார் படம் வெற்றியடைய அலகு குத்திக் கொண்ட ரஜினி ரசிகர்கள்..!

மதுரையில் ரஜினி ரசிகர்கள் அலகு குத்தி,மண்சோறு சாப்பிட்டு தர்பார் படம் வெற்றியடைய திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் வேண்டிக் கொண்டனர்.

ரஜினிகாந்த் - நயன்தாரா நடித்து, ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியுள்ள தர்பார் திரைப்படம் பொங்கல் திருநாளை ஒட்டி, ஜனவரி 9ஆம் தேதியன்று வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது. பலத்த எதிர்பார்ப்புடன் வெளியாகும் படம் என்பதால் ரஜினி ரசிகர்கள் பேனர் வைப்பது, ஹெலிகாப்டரில் இருந்து பூ போடுவது என கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 167 வது படம் நாளை வெளியாவதை ஒட்டி மதுரையில் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் திரைப்படம் வெற்றி அமைய வேண்டும் என்று அலகு குத்தி மற்றும் மண் சோறு சாப்பிட்டு ரஜினி ரசிகர்கள் பிரார்த்தனை செய்தனர்.