ரஜினி, அஜித், சிவகார்த்திகேயன் வாக்களிப்பு.. விஜய் துபாயில் சிக்கி கொண்டாரா?

  • IndiaGlitz, [Friday,April 19 2024]

தமிழகத்தில் இன்று பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில் பல திரை உலக பிரபலங்கள் சென்னையில் உள்ள வாக்கு சாவடிகளில் வாக்களித்து வரும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் வாக்களித்ததாகவும் அதே கல்லூரியில் நடிகர் கார்த்திக் தனது மகன் கௌதம் கார்த்திக் உடன் வந்து வாக்களித்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் அரை மணி நேரத்துக்கு முன்பே வந்து விட்ட அஜித், திருவான்மியூர் வாக்குச்சாவடியில் வரிசையில் காத்திருந்தது தனது ஜனநாயக கடமையை ஆற்றிய புகைப்படமும் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

மேலும் நடிகை ராதிகா தனது கணவர் சரத்குமார் உடன் வாக்களித்ததாகவும், நடிகை குஷ்பு தனது கணவர் சுந்தர் சி மற்றும் மகள்களுடன் வந்து வாக்களித்த புகைப்படங்கள் அவரது சமூக வலைதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தான் குடும்பத்துடன் ஜனநாயக கடமையாற்றிவிட்டதாக குஷ்பு தெரிவித்துள்ளார். அதேபோல் நடிகர் சிவகார்த்திகேயன், தனது மனைவி ஆர்த்தியுடன் வந்து வாக்களித்த நிலையில், அனைவரும் ஜனநாயக கடமையாற்ற வேண்டும் என்று பேட்டியளித்தார்.

இந்த நிலையில் நடிகர் விஜய் வாக்களிப்பதற்காக நேற்று ரஷ்யாவில் இருந்து கிளம்பிய நிலையில் அவர் துபாயில் சிக்கிக் கொண்டதாகவும் துபாயில் பெய்த கனமழை காரணமாக பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் சில மணி நேரம் தாமதமாக வந்து வாக்களிப்பார் என்றும் கூறப்படுகிறது.

More News

நீரிழிவு நோய்க்கும் ஒரு பெண்ணின் கருவுறுதலுக்கும் உள்ள தொடர்பு ?

கர்ப்ப காலத்தில் ஏற்படும் நீரிழிவு நோய்க்கு முக்கிய காரணமாக உடல் எடை கண்டறியப்பட்டுள்ளது.......

'குக் வித் கோமாளி' சீசன் 5: கிராண்ட் ஓப்பனிங் தேதி அறிவிப்பு.. அட்டகாசமான ப்ரோமா வீடியோ..!

விஜய் டிவியில் நடந்த நான்கு வருடங்களாக ஒளிபரப்பான 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் ஒளிபரப்பாகும் தேதி

எதுல முடியுமோ அதுல குறிச்சு வச்சுக்கோங்க: 'ஸ்டார்' ரிலீஸ் தேதியை அறிவித்த கவின்..!

கவின் நடித்த 'ஸ்டார்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதி கட்ட தொழில்நுட்ப பணிகளும் முடிவடைந்து விட்டது என்றும் விரைவில் இந்த படம் ரிலீஸ் ஆக இருப்பதாகவும் கூறப்பட்டது.

கமல்ஹாசனால் தான் எனது படம் வெளியாகவில்லை: இயக்குனர் சீனுராமசாமி

கமல்ஹாசனால் தான் தன்னுடைய 'இடம் பொருள் ஏவல்' திரைப்படம் வெளியாகவில்லை என இயக்குனர் சீனு ராமசாமி தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

30 வருடங்களுக்கு பின் சூப்பர் ஹிட் படத்தின் 2ஆம் பாகம்.. அல்லு அர்ஜுன் உள்பட 4 மாஸ் நடிகர்கள் பரிசீலனை..!

30 ஆண்டுகளுக்கு முன் வெளியாகிய சூப்பர் ஹிட் ஆன படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாக இருக்கும் நிலையில் அந்த படத்தில் நாயகனாக நடிக்க அல்லு அர்ஜுன், யாஷ் உட்பட நான்கு