மனைவியை கொலை செய்துவிட்டு மொபிலில் கேம் விளையாடிய கணவன்: அதிர்ச்சியில் போலீசார்!

  • IndiaGlitz, [Tuesday,December 08 2020]

மனைவியை கத்திரிக்கோலால் குத்திக் கொலை செய்துவிட்டு அவரது பிணம் அருகே உட்கார்ந்து கேம் விளையாடிய கணவனால் ராஜஸ்தான் மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த விக்ரம் சிங் என்பவருக்கு சிவ் கன்வர் என்ற மனைவி இருந்தார். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் விக்ரம் சிங் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்ததால் மனைவி சிவ் கன்வர் வேலைக்கு சென்று குடும்பத்தை நடத்தி வந்தார் இதனால் இருவருக்கும் இடையே அவ்வப்போது வாக்குவாதம் நடந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் நேற்று கன்வர் சிங் வேலை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்த நிலையில் மீண்டும் இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடந்தது. அப்போது ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில் விக்ரம் சிங் கோபத்தில் தனது மனைவியை கத்திரிக்கோலால் குத்திக் கொலை செய்தார்.

இது குறித்து தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். காவல்துறையினர் விரைந்து வந்து விக்ரம் சிங் வீட்டிற்கு வந்தபோது சிவ் கன்வர் ரத்த வெள்ளத்தில் கிட்ந்தார். இறந்து கிடந்த பிணத்தின் அருகே உட்கார்ந்து விக்ரமசிங் மொபைல் போனில் கேம் விளையாடிக் கொண்டிருந்தார். இதனை அடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை செய்து வருகின்றனர். சம்பவம் நடந்தபோது இரண்டு குழந்தைகளும் வீட்டில் இல்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

More News

போயஸ் கார்டன் பாதுகாப்பிற்காக சொந்த செலவில் ரஜினி செய்த விஷயம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தனது அரசியல் வருகையை சமீபத்தில் உறுதி செய்தார் என்பதும் தமிழருவி மணியன் மற்றும் அர்ஜுனா சம்பத் ஆகிய இருவரையும் ரஜினி மக்கள் மன்றத்தை

நடிகர் சரத்குமாருக்கு கொரோனா: உறுதி செய்த ராதிகா!

தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் லட்சக்கணக்கானோர் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து வரும் நிலையில் கொரோனா வைரஸ்க்கு திரையுலகினர்களும் தப்பவில்லை என்பது தெரிந்ததே 

ஆஸ்திரேலியா மைதானத்தில் அஜித் ரசிகர்கள்: தெறிக்கவிடும் நடராஜன் போஸ்டர்!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்று வரும் மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு

ஆரியின் மேல் ஆத்திரமடையும் நிஷா: மெல்ல மெல்ல வெளியே வரும் குரூப்பிஸம்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் குரூப்பிஸம் இல்லை என அர்ச்சனா குரூப்பினர் சொல்லி கொண்டு வந்தாலும் அவ்வப்போது கமல்ஹாசனும் தனித்தன்மையுடன் விளையாடுங்கள் என சுட்டிக்காட்டி

அர்ச்சனாவை டார்ச்சர் செய்த ரியோ, நிஷா: உடைகிறதா 'அன்பு' குரூப்?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய 'புதிய மனிதா' என்ற டாஸ்க்கில் மனிதர்கள் மற்றும் ரோபோ என இரு அணிகளாக பிரிந்துள்ளனர்.