ரேபிட் கிட்களை பயன்படுத்த வேண்டாம்: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அதிரடி அறிவிப்பு

கொரோனா வைரஸ் பரிசோதனை செய்வதற்காக ரேபிட் கிட் கருவிகளை சீனாவிலிருந்தும் தென்கொரியாவில் இருந்தும் தமிழகம் உட்பட இந்தியாவின் பல மாநிலங்களும், மத்திய அரசும் வாங்கி பயன்படுத்தி வருகிறது. இந்த நிலையில் திடீரென இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ரேபிட் கிட் கருவிகளை பயன்படுத்த வேண்டாம் என்று அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த இரண்டு நாட்களுக்கு ரேபிட் கிட்களை பயன்படுத்த வேண்டாம் என்று கூறியுள்ள இந்திய மருத்துவக் கவுன்சில் அது தவறான முடிவை தருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளதால் தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களும் ரேபிட் கிட்களால் பரிசோதனை செய்ய வேண்டாம் என்றும் கூறியுள்ளது.

குறிப்பாக ராஜஸ்தான் அரசு 6% முதல் 71% வரை மாறுபட்ட முடிவுகளை ரேபிட் கிட் கருவிகள் தருவதாக குற்றஞ்சாட்டியுள்ளதை அடுத்தே அடுத்த இரண்டு நாட்களுக்கு இந்த கருவியை பயன்படுத்த வேண்டாம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ரேபிட் கிட் தரத்தை ஆய்வு செய்து வருவதாகவும் இந்த ஆய்வுக்குப் பின்னரே புதிதாக வந்துள்ள ரேபிட் கிட்களை பயன்படுத்துவதா? வேண்டாமா? என்பது குறித்த தகவலை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

ஊரடங்கு நேரத்தில் மகளுடன் பைக் ரைடிங் செய்த 'தல'

கிரிக்கெட் ரசிகர்களால் அன்புடன் 'தல' என்று அழைக்கப்படும் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும், தற்போதைய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான தோனி

பெருந்தொற்றில் இருந்து தடுப்பூசி மனித உயிர்களை எவ்வாறு காப்பாற்றுகிறது???  

கொரோனா பரவல் உலகம் முழுக்க ஒரு பெரிய பிரளயத்தையே ஏற்படுத்தியிருக்கிறது எனலாம்.

ஒரே சேனலில் பணிபுரியும் 26 பேர்களுக்கு கொரோனா: அதிர்ச்சி தகவல்

கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் தற்போது பத்திரிகையாளர்களையும் கொரோனா வைரஸ் தாக்க தொடங்கிவிட்டது.

இணையத்தில் வைரலாகும் ஜாக்குலின் ஜாலி வீடியோ

ஊரடங்கு உத்தரவு காரணமாக சினிமா படப்பிடிப்பு மற்றும் தொலைக்காட்சி படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதை அடுத்து சினிமா நட்சத்திரங்கள் மற்றும் தொலைக்காட்சி நட்சத்திரங்கள் தற்போது

1200 கிமீ, 4 நாட்கள், தெலுங்கானா - கன்னியாகுமரி: பைக்கில் வந்த இஞ்சினியர்

தெலங்கானா மாநிலத்தில் இருந்து இருசக்கர வாகனத்தில் நான்கு நாட்கள் பயணம் செய்து கன்னியாகுமாரி வந்த இன்ஜினியர் ஒருவர் குறித்த செய்தி பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது