அடுத்த படம் குறித்து ராஜமெளலியின் அதிகாரபூர்வ அறிவிப்பு

  • IndiaGlitz, [Thursday,March 22 2018]

பாகுபலி, பாகுபலி 2 என இரண்டு சர்வதேச சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய ராஜமெளலியின் அடுத்த படத்தின் அறிவிப்புக்காக அவரது ரசிகர்கள் பல மாதங்களாக காத்திருந்த நிலையில் தற்போது ஒரு சிறு வீடியோ மூலம் தனது அடுத்த படம் குறித்த தகவல்களை ராஜமெளலி தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே வெளிவந்த தகவலின்படி இந்த படத்தில் ராம்சரண்தேஜா மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பதை உறுதி செய்துள்ள ராஜமெளலி இந்த படத்தில் மேலும் பல தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி திரையுலகை சேர்ந்த பல பிரபலங்கள் நடிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்த படத்தை டிவிவி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

தற்போதைக்கு இந்த படம் #RRR என்று அழைக்கப்படும் என்றும், இது இரண்டு ஹீரோக்கள் மற்றும் இயக்குனரின் முதல் எழுத்துக்கள் என்றும் இந்த படத்தின் டைட்டில் அல்ல என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த படம் குறித்த மேலும் பல தகவல்கள் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

More News

சக நடிகர்களுக்கு ஜாக்கிசான் கொடுத்த விலைமதிப்பில்லா பரிசு

ஜாக்கிசான் நடித்த 'குங்பூ யோகா' திரைப்படம் கடந்த ஆண்டு வெளியான நிலையில் அந்த படத்தில் பணிபுரிந்த முக்கிய நடிகர்களுக்கும் மேலும் தனக்கு நெருக்கமானவர்களுக்கும் ஜாக்கி சான் பரிசு ஒன்றை அனுப்பியுள்ளார்.

சிவகார்த்திகேயன் படத்திற்காக கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபடும் நடிகைகள்

ரஜினியின் 'கபாலி' படத்தில் இடம்பெற்ற 'நெருப்புடா' பாடல் மூலம் பெரும்புகழ் பெற்ற அருண்காமராஜ், முதன்முதலில் இயக்கும் படம் ஒன்றை சிவகார்த்திகேயன் தயாரிக்கின்றார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்

நான் வந்துட்டேன்னு சொல்லு: தமிழில் டுவீட் போட்ட பிரபல சிஎஸ்கே வீரர்

இந்தியாவின் எந்த மாநிலத்தை சேர்ந்தவராக இருந்தாலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விளையாட வந்துவிட்டால், தமிழ் ரசிகர்களின் பாசமழைக்கு பஞ்சமே இருக்காது என்பது தெரிந்ததே. இதற்கு நல்ல உதாரணம் தல தோனி

முடிவுக்கு வந்தது ஜிவி பிரகாஷின் அடுத்த படம்

ஜிவி பிரகாஷ் நடித்து வந்த குப்பத்து ராஜா' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் அவர் நடித்து வந்த 'சர்வம் தாள மையம்' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பும் முடிந்துவிட்டது

சென்னையில் தற்கொலைக்குக் முயன்ற இரண்டு காவலர்கள் கைது

நேற்று சென்னையில் டிஜிபி அலுவலகம் எதிரே ரகு, கணேஷ் ஆகிய இரண்டு ஆயுதப்படை காவலர்கள் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர்